Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இயற்கை, கலாசாரம், மரபுரிமைகளில் வளமான நாடு இலங்கை

March 15, 2019
in News, Politics, World
0
பௌத்த தத்துவத்தை பின்பற்றுகின்றவன் என்ற வகையில் இந்த பூவுலகை மனிதர்களுக்கு மட்டுமன்றி அனைத்து ஜீவராசிகளுக்கும் உரிய இடமாக பாதுகாக்கும் பொறுப்பை நாம் கொண்டுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கென்யாவில் தெரிவித்துள்ளார்.
கென்யாவின் நைரோபி நகரில் நேற்று (14) நடைபெற்ற ஐ.நா. சபையின் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

இயற்கை, கலாசாரம் மற்றும் மரபுரிமைகளில் வளமான நாடு என்ற வகையில் இலங்கை நாட்டின் சமூக, பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக இயற்கையோடு தொடர்புடைய  வர்த்தக துறைகளில் முதலீடு செய்வதற்கு விருப்பத்துடன் இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் ஐ.நா. சுற்றாடல் பேரவையின் நான்காவது கூட்டத்தொடர் அதற்கான ஒரு பலமான அடித்தளத்தை வழங்கியிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

காலநிலை மாற்றம் பற்றிய பிரச்சினையை ஒழிப்பதற்கு முன்னெப்போதும் இல்லாத சர்வதேச அர்ப்பணிப்பை கொண்டுள்ள பரிஸ் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதுடன், 2019ஆம் ஆண்டின் சர்வதேச காலநிலை இடர் சுட்டியில் எமது நாடு இரண்டாவது இடத்தில் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது என்ற வகையில் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளதென்றும் ஜனாதிபதி தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளார்.

“சுற்றாடல் சவால்கள் மற்றும் பேண்தகு நுகர்வு மற்றும் உற்பத்திக்கான புத்தாக்க தீர்வுகள்” என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும்.

கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவின் விசேட அழைப்பின்பேரில் ஜனாதிபதி இந்த மாநாட்டில் பங்குபற்றியுள்ளார்.

கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யாட்டா, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மடகஸ்கார் ஜனாதிபதி என்ட்ரி ரஜோயிலினா ஆகியோரின் தலைமையில் நைரோபி நகரில் உள்ள ஐ.நா. சுற்றாடல் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் 58 நாடுகளின் சுற்றாடல்துறை அமைச்சர்களும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Previous Post

உயர் நீதிமன்றில் இருந்து வாபஸ் பெறப்பட்ட மகிந்தவின் மனு

Next Post

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேலும் கால அவகாசம் கோரும் அரசு

Next Post

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேலும் கால அவகாசம் கோரும் அரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures