மொரட்டுவ, ராவத்தாவத்தப் பகுதியில் 161 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மாக்கந்துர மதுஷின் சகாவான கெலுமாவின் வீட்டில் இருந்தே குறித்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் இருந்து 5000 இற்கும் அதிகமான ரி – 56 ரக துப்பாக்கிக்கான தோட்டாக்களும், கைத்துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

