இதுவரையில் எந்தவித அமைச்சுக்கும் உட்படுத்தப்படாத நிறுவனங்கள் பலவற்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அமைச்சுக்களுக்குள் உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை தகவல் தொடர்பான ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சின் கீழும், ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிறுவனங்களை நிதி அமைச்சின் கீழும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இலங்கை டெலிகொம் நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிறுவனங்கள் யாவும் தகவல் தொலைத் தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் கீழும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

