பின்லாந்து நாட்டில் 2015ம் ஆண்டு முதல், மத்திய கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் 14ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் 5 வாரங்களே உள்ள நிலையில், கூட்டணியில் பிரதமராக இருக்கும் ஜுகா சிபிலா அவரது அரசு பதவி விலகுவதாக தெரிவித்தார்.
தனது ராஜினாமா கடிதத்தை அதிபரிடம் நேற்று வழங்கினார். பின்லாந்தில் முதியோர்களுக்கான செலவுகளை கட்டுப்படுத்த புதிய சீர்திருத்தங்களை ஜுகா கொண்டு வந்தார். அது தோல்வி அடைந்ததால் அவர் பதவி விலகி உள்ளார்.

