யாழ்ப்பாண மாவட்டத்தில் வீட்டுத்திட்டம் மற்றும் , பாதிப்பு நிவாரணங்களின்போது விதவைப் பெண்ணிடம் கையூட்டுப் பெற்ற கிராம சேவகரை உடன் பதவி நீக்கம் செய்யுமாறு மாவட்டச் செயலாளர் அதிரடி உத்தரவு ஒன்றினைப் பிறப்பித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள ஓர் கிராம சேவகர் பாதிப்பு நிவாரணத்திற்காக வழங்கப்பட்ட ஒரு லட்டசம் ரூபாவில் 25 ஆயிரம் ரூபாவினை லஞ்சமாக கோரியுள்ளார். இவ்வாறு லஞ்சமாக பெரிய பணத்தில் 15 ஆயிரம் ரூபாவினை மட்டும் பயணாளி வழங்கியுள்ளார். அவ்வாறு 15 ஆயிரம் போதாது மேலும் 10 ஆயிரம் ரூபாவும் வழங்க வேண்டும் என கிராம சேவகர் கண்டிப்பாக கோரியுள்ளார். அதன் பெயரில் மீண்டும் 10 ஆயிரம் ரூபா பயணாளியினால் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒரு லச்சம் ரூபா இழப்பீட்டிற்குத் தேர்வானவர் ஓர் பெண் தலமைத்துவக் குடும்பத்தினைச் சேர்ந்தவர். தனக்கு நடந்த அவலத்தினை ஓர் இரகசிய கடிதம் மூலம் மாவட்டச் செயலாளரிற்கு எழுத்தில் அனுப்பியுள்ளார். அவ்வாறு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் இரு உத்தியோகத்தர்களை நேரில் அனுப்பி மாவட்டச் செயலாளர் ஆராய்ந்துள்ளார்.
அதன் பின்பு உரிய பெண்மனியை மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி உறுதி செய்துகொண்டார். இவ்வாறு இடம்மெற்றமை சரி என உறுதி செய்யப்பட்டதோடு முறைப்படியான ஆதாரங்களையும் திரட்டி உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்துள்ளார்.
நிர்வாக நடைமுறையின் கீழான இறுதி முடிவு கிட்டும் வரையில் குறித்த கிராம சேவரை உடன்னியாக தற்காலிக பதவி நீக்கம் செய்யுமாறும் பிரதேச செயலாளருக்கு மாவட்டச் செயலாளர் நேற்றைய தினம் எழுத்தில் உத்தரவிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் எந்தஙொரு உத்தியோகத்தரும் சேவைக்காக மக்களிடமிருந்து எந்தப் பணமும் கோரமுடியாது. அவ்வாறு கோரினாலோ அல்லது பெற்றாலோ எனது கவனத்திற்கு அச்சமின்றி தெரிவிக்கலாம். நேரில் வந்தும் தைரிவிக்க முடியும். அல்லது தபாலிலும் அனுப்பி வைக்கலாம். அவ்வாறான முறைப்பாடுகள் உடனடியாக ஆராயப்படும். உண்மை என எண்பிக்கப்பட்டால் தகுதி தராதரம் இன்றி இவ்வாறே நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு மாவட்டச் செயலாளருக்கு முழு அதிகாரம் உண்டு. எனப் பதிலளித்தார்.

