இதுவரைகாலமும் புலிகளையும் புலிகளின் சொத்துக்களையும் கைப்பற்றிய வெளிநாட்டு பினாமிகள் இப்போதுவரை ஏன் மெளனமாக இருக்கின்றனர் .அண்மையில் புலிகளின் தலைவர்களில் ஒருவரான வெளிநாட்டு வாசி ரெஜி அவர்கள் புலிகளின் சொத்துக்கள் தொடர்பில் விளக்கமான செவ்வி ஒன்றை எமது ஊடகத்துக்கு வழங்கியிருந்தார் .
அந்தவகையில் புலிகளின் சொத்துக்களை பதுக்கியும் ,அடாத்தாக கைப்பற்றியும் வைத்திருக்கும் வெளிநாட்டில் வசிக்கும் கொள்ளைக்கும்பல் இதுவரை அந்த சொத்துக்கள் பற்றி எந்த அபிப்பிராயத்தையும் வெளியிடவில்லை ,அப்பாவித்தமிழ் மக்கள் தாயகத்தில் அல்லல்பட அவர்களின் நிலைமையை சொல்லி வெளிநாடுகளை ஏமாற்றி பறித்த பணத்தில் சொகுசுவாழ்க்கை வாழும் மானம்கெட்ட கொள்ளை முதலைகள் ஏன் வாய்திறந்து பேசாமல் மெளனமாக இருக்கின்றனர் .
புலிகளின் சொத்துக்களை பதுக்கி வைத்திருப்போர் ஏன் மெளனம் காக்கின்றனர்?
இன்னமும் மக்களின் கண்ணீரில் வாளும் வெளிநாட்டு கும்பல் தாயக மக்களை நோக்காது பணத்தை பதுக்கி வைத்துவிட்டு சுகபோக வாழ்க்கையில் ஈடுபடுவது நியாயமா?
தாயமக்கள் – புலிகளின் பணத்தை பதுக்கியவர்களை இனம்காட்டி அவரவர் வசிக்கும் நாடுகளில் வழக்குகளைப்போட்டு அவர்களை பிடிக்க தயாராகிவிட்டனர்.
புலிகளை சாட்டி பணம் கொள்ளையிட்ட கொள்ளைக்கும்பல் மெளனமாக மறைந்து இருந்து மக்களுக்கு துரோகம் செய்வதா நியாயம் ?
மக்களே விளிப்படைவீர் –

