சார்லி எப்தோ கேளிக்கை பத்திரிகை மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான Peter Cherif கைது செய்யடதற்கு அப்பத்திரிகை பாராட்டுக்களை வெளியிட்டுள்ளது.
அல்லாவை தவறாக சித்தரித்தார்கள் என்பதற்காக ஜனவரி 2015 ஆம் ஆண்டு சார்லி எப்தோ பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்திருந்தனர். தாக்குதலை நடத்திய Kouachi சகோதர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதும், அவர்களுடன் தொடர்பில் இருந்த முக்கிய குற்றவாளி Peter Cherif தேடபட்டு வந்தான். இந்நிலையில் காவல்துறையினரை பாராட்டும் விதத்தில், சார்லி எப்த்தோ பத்திரிகை இந்த வார அட்டைப்படத்தை வடிவமைத்துள்ளது.
Peter Cherif இனை இரும்பு சங்கிலி போட்டு காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளதாக வரையப்பட்டுள்ள இந்த ஓவியம், பச்சை நிற பின்னணியில் உள்ளது. தவிர அட்டைப்படத்தில் <<Passe au journal quand tu auras 5 minutes>> என எழுதப்பட்டுள்ளது.
கடந்த வாரம் Djibouti நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த Peter Cherif, நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரான்சுக்கு அழைத்துவரப்பட்டிருந்தான். இதுவரையான விசாரணைகளில் அவன் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

