இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் தாலிக்கொடியை மோட்டார்ச் சைக்கிளில் வந்த இருவரால் அறுத்துச்செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலை கிழக்கு சிற்றம்பலம் வீதியில் இக்கொள்ளைச் சம்பவம் இன்று மதியம் 1.30 மணிக்கு மீசாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த கர்ப்பிணிப் பெண் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற திருடர்கள் கர்ப்பிணிப் பெண்ணை உதைந்து விழுத்தி விட்டு தாலிக்கொடியினை அபகரித்து சென்றுள்ளனர்.
இதன்போது குறித்த பெண் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அண்மையிலும் மீசாலைப்பகுதியில் நான்கு வழிப்பறிகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

