Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கன்ரேனர்களில் ஏற்றிவரப்பட்ட யானைகளால் நெடுங்கேணி மக்கள் அவலம்

December 23, 2018
in News, Politics, World
0

மின்னேரியாவில் இருந்து வனவளத் திணைக்களத்தினரால் கன்லேனர்களில் ஏற்றிவரப்பட்ட யானைகள் சில நெடுங்கேணிப் பகுதிக் காட்டில் இறக்கிவிடப்பட்டுகின்றமை தொடர்பில் எவருமே கண்டுகொள்வது கிடையாது. என நெடுங்கேணிப் பகுதி கமக்கார அமைப்பினர் கவலை தெரிவிக்கின்றனர்.

நெடுங்கேணிப் பகுதியில் போரிற்கு முன்பும் யானை வந்தபோதும் ஒரு சில யாணைகள் மட்டுமே நடமாடியது. அதேநேரம் போர்க் காலத்தில் நெடுங்கேணியில் 4ற்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தன. இந்த நிலையில் போர் முடிவுற்று சொந்த இடம் திரும்பிய காலத்தில் மாதம் ஓரு முறை அல்லது இரு முறையானைகள் வந்தபோதும் அவை விரட்டப்பட்டது.

அவ்வாறு மக்கள் நடமாட்டம் அற்ற காலத்திலேயே ஒரு சில யானைகளின் நடமாட்டம் கண்ட எமது பகுதியில் இன்று யானைகள் தொல்லை இல்லாத நாளே கிடையாது என்ற நிலமைக்கு வந்துவிட்டது. அதேநேரம் ஒரே நாளில் பல திசைகளிலும் யானைகள் படையெடுப்பதனால் பெரும் அச்சமாகவே உள்ளதோடு பயன்தரு மரங்கள் எவையும் நாட்டமுடியவில்லை.

இவ்வாறு யானைகள் அதிகரித்தமை தொடர்பில் நாம் பிரதேச செயலகம் , மாவட்டச் செயலகம் , பொலிசார் , வனவளத் திணைக்களம் , வனஜீவராசிகள் திணைக்களம் என தொடர்புபட்ட சகலருக்கும் தெரியப.படுத்தியதோடு யானை வேலிகள் கேட்டும் எந்தப் பயனும் கிடையாது. இதனால் யானை அதிகரிப்பிற்கான காரணத்தை தேடினோம். அதன் பிரகாரம் மின்னேரியாப் பகுதியில் உள்ள வனவளத் மிணைக்களம் , வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அப்பகுதி மக்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக அங்கே மக்கள் குடியிருப்பினை நெருங்கும் யானைகள் பிடிக்கப்பட்டு தட்டு ஊர்திகளில் ஏற்றி வரப்படுகின்றன.

அவ்வாறு கொண்டுவரப்பட்ட யானைகளில் இதுவரை 12 யானைகள் நெடுங்கேணிப் காட்டுப் பகுதியில் இறக்கப்பட்டதாக மின்னேரியா அலுவலகத்தில் பணியாற்றும் ஓர் அலுவலர் தகவல் தெரிவித்ததோடு கடந்த வாரமும் ஓர் யானை கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கொண்டுவரப்படும் யானைகள் மின்னேரியாவில் இருந்தே இரவு 10 மணிக்குப் பின்பே புறப்பட்டு அதிகாலை இரண்டு மணி அல்லது 3 மணியளவில் அதிகாலை வேளையில் மக்கள் நடமாட்டம் அல்லாத நேரத்தில் இறக்குவதனால் மக்களினால் தடுக்கவும் முடியவில்லை.

எனவே இதனை தடுப்பதற்கு உரிய திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்கத் தவறினால் தொடர் காவல் புரிந்து யானை ஏற்றிவரும் பார ஊர்தி மடக்கிப் பிடிக்கப்படும். அவ்வாறு பார ஊர்தி பிடிக்கப்படும்போது இந்த திணைக்கள அதிகாரிகள் எவரும் இத் திசையில் சமூகமளிக்க முடியாத நிலமையை தோற்றுவிப்பதனைத் தவிர எமக்கு வேறு மார்க்கம் தெரியவில்லை. ஏனெல் நெடுங்கேணியில் மட்டும் இந்த போரின் பின்னர் மட்டும் ஆயிரத்மிற்கும் மேற்பட்ட தென்னை , பப்பாசி , வாழை என எவற்றினையும் விட்டுவைக்கவில்லை. என்றனர்

Previous Post

கட்சியின் சிபார்சுப் பட்டியலிற்கு மட்டுமே பழமரக் கன்றுகள் வழங்கப்படுவதாக விவசாயிகள் கவலை

Next Post

முன்பள்ளிகளிற்கான ஆசிரியர்களிற்கான நிரந்தர நியமனம்

Next Post

முன்பள்ளிகளிற்கான ஆசிரியர்களிற்கான நிரந்தர நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures