Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று அல்லது நாளை

December 13, 2018
in News, Politics, World
0

பாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்றோ (13) அல்லது நாளையோ (14) வழங்கப்படும் என நம்பிக்கை வெளியிடப்படுகின்றது.

இந்த தீர்ப்பு தொடர்பிலும் தீர்ப்பின் பின்னரும் ஏற்படப் போகும் நிலைமை தொடர்பிலும் பல்வேறு மட்டத்திலும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இது குறித்து முன்னாள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

இந்த வழக்கின் தீர்ப்பு இரு விதத்தில் வர இடம்பாடுள்ளது. ஒன்றில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் சட்ட ரீதியானது எனவும், இன்றேல் சட்ட ரீதியற்றது எனவும் வரப் போகின்றது. சட்ட ரீதியானது என தீர்ப்பு வருமாக இருந்தால் தேர்தல் ஒன்று வரும்.

சட்ட ரீதியற்றது என்ற தீர்ப்பு வழங்கப்படுமாக இருந்தால், பாராளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது. தொடர்ந்தும் பாராளுமன்றம் வழமை போன்று நடைபெறும். இருப்பினும், இதன்போது சட்ட சபைக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையில் கருத்து முரண்பாடு உருவாகும். இந்தப் பிரச்சினையை சீர் செய்ய ஜனாதிபதிக்கு ஒரேயொரு சந்தர்ப்பம் அரசியல் யாப்பில் உள்ளது.

அதாவது, 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 85 ஆவது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள ஜனாதிபதிக்கான அதிகாரத்தின் பிரகாரம், சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல முடியும். இதன்போது, பொதுத் தேர்தல் ஒன்று தேவையா? இல்லையா? என பொது மக்களிடம் கோர முடியும்.

இந்த சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் எந்தவொரு நீதிமன்றத்துக்கு கேள்வி கேட்க முடியாது. சர்வஜன வாக்கெடுப்பு குறித்து 19 ஆவது திருத்தச் சட்டத்திலும் எந்தவொரு வரையறையும் ஏற்படுத்தப்படவில்லை.

இதேவேளை, உயர் நீதிமன்றம் தற்பொழுதுள்ள பாராளுமன்றக் கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் குறித்த விசாரணையின் போது, சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்க முடியும். இருப்பினும், உயர் நீதிமன்றத்தினால் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்லுமாறு தீர்ப்பு வழங்க முடியாது எனவும் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான விசாரணை கடந்த 7 ஆம் திகதி நிறைவடைந்தது. இருப்பினும், தீர்ப்பு வழங்கும் தினம் குறித்து உறுதியாக அறிவிக்கப்படவில்லை. அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கான இடைக்காலத் தடை உத்தரவை தொடர்ந்தும் நீடிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Previous Post

ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்குவது தமது நோக்கமல்ல

Next Post

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுங்கள்

Next Post

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

June 21, 2026
தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026

Recent News

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

June 21, 2026
தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures