சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளை மீறியே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு ஏற்ப சபாநாயகர் கரு ஜயசூரிய செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
சபாநாயகர் நிலையியற் கட்டளைகளுக்கு ஏற்ப சபாநாயனர் செயற்பட வேண்டும். அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவை இரண்டில் ஏதேனும் ஒன்று நடைபெற வேண்டும்.
அவ்வாறு இல்லா விட்டால் இந்த நெருக்கடி நிலை தொடரும். இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி விஜேவீரவின் கொள்கைகளை மறந்து செயற்படுகின்றது.
அந்த கட்சி தற்போது முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினுடைய கொள்கைகளை பின்பற்றி செயற்பட்டு வருகின்றனர் என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

