யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் கழுத்து அறுக்கப்பட்டு வீதியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞர் வீதியால் சென்றவர்களால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன் தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லைப்பிட்டியில் உள்ள வாடி வீட்டுக்கு அண்மையில் ஓர் இளைஞன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீதியோரம் வீழ்ந்து கிடந்துள்ளார்.
அந்த வீதியால் பயணித்த முச்சக்கர வண்டிச் சாரதி அதை அவதானித்துள்ளார்.
வீதியால் வந்த மற்றொரு முச்சக்கர வண்டிச் சாரதியும் இணைந்து அவசர நோயாளர் காவு வண்டிச் சேவைக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த நோயாளர் காவு வண்டி இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
சம்பவ இடத்தில் ஒரு சோடி செருப்புக்கள், ஈருளி என்பன திக்குத் திக்காக் கிடந்துள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

