Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான மென்போக்கு

July 5, 2016
in News, Politics
0

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான மென்போக்கு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது அமர்வு ஜெனீவாவில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.

மனித உரிமைகள் பேரவை அமர்வில் வழமை போன்று இம்முறையும் இலங்கை விவகாரமும் கவனத்தில் எடுக்கப்படவிருக்கின்றது.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கடந்த முறை அமர்வின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது எத்தகைய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பாக இப்போதைய அமர்வில் இலங்கையின் சார்பில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது.

அதேசமயம் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல்-ஹுஸைன் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கவிருக்கின்றார்.

மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மனித உரிமைகளைப் பேணுவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம், மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சர்வதேசத்துக்குப் பொறுப்புக் கூறுவதில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றகரமான நகர்வுகள் பற்றியெல்லாம் நேரில் ஆராய்ந்து கண்டறிவதே அல்-ஹுஸைனின் இலங்கை வருகையின் நோக்கமாக இருந்தது.

அதேவேளை மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை முன்னெடுத்துள்ள நகர்வுகளை ஆராய்வதற்கென ஐ. நா. நிபுணர்கள் சிலர் இடைப்பட்ட காலப் பகுதியில் இலங்கைக்கு வந்து சென்றிருந்தனர்.

இவ்வாறு ஐ. நா. நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து திரட்டப்பட்ட தகவல்களை அடிப்படையாக வைத்து மனித உரிமைகள் பேரவையின் இம்முறை அமர்வில் ஆணையாளர் அல்-ஹுஸைன் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கவிருக்கிறார்.

எவ்வாறாயினும் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் இம்முறை அமர்வு பெரும்பாலும் இலங்கைக்கு சாதகமானதாக அமையுமென்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

இது ஒருபுறமிருக்க, வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதில், சர்வதேச தலையீடு குறித்து இன்னும் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே செல்கின்றன.

மனித உரிமைகள் தீர்மானத்தை வைத்து நோக்குகையில் நீதி விசாரணையின் போது சர்வதேச தலையீடென்பது தவிர்க்க முடியாததென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூறியிருக்கின்ற போதிலும், அரசாங்கத்தைப் பொறுத்தவரை நிலைப்பாடு அதுவல்ல என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகமொன்றுக்கு சில தினங்களுக்கு முன்னர் வழங்கிய பேட்டியின் போது தெரிவித்திருந்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சர்வதேச தலையீடின்றி உள்ளகப் பொறிமுறையின் கீழேயே நீதி விசாரணை நடத்தப்படுமெனக் கூறியிருந்தார்.

எனினும் நீதி விசாரணைக்கான தொழில்நுட்ப உதவிகளை மாத்திரம் வெளிநாடுகளில் இருந்து பெற்றுக் கொள்வதில் ஆட்சேபம் கிடையாதென இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இக்கருத்துகளையெல்லாம் வைத்துப் பார்க்கின்ற போது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் சர்வதேசத்தின் தலையீட்டை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்றே எண்ணத் தோன்றுகின்றது.

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான விசாரணையொன்று ஆரம்பிக்கப்படுமானால் பாதுகாப்புப் படைகளின் உயரதிகாரிகளும், முன்னைய ஆட்சியின் முக்கிய பிரமுகர்களுமே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்களென்பது உறுதி.

நாட்டின் இன்றைய அரசியல் நிலைமையை வைத்துப் பார்க்குமிடத்து இவ்வாறானதொரு விசாரணையானது மக்கள் மத்தியில் அரசுக்கு பெரும் பின்னடைவான நிலைமையை ஏற்படுத்துமென்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

உள்நாட்டுப் பொறிமுறையோ இல்லையேல் சர்வதேச பங்களிப்போ தென்னிலங்கையில் அரசுக்கு எதிரான உணர்வலையையே ஏற்படுத்தும்.

அத்துடன் முப்பது வருட கால பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த யுத்த வெற்றி நாயகர்களென தங்களைப் பிரசாரப்படுத்திக் கொண்டிருக்கும் ராஜபக்ச தரப்பினருக்கு வாய்ப்பானதொரு நிலைமையையே அது ஏற்படுத்தி விடக்கூடும்.

எனவே போர்க்குற்றங்கள் தொடர்பான எந்தவொரு விசாரணையும் அரசாங்கத்துக்கு சாதகமான பயனைத் தந்துவிடப் போவதில்லை.

இவ்வாறானதொரு யதார்த்தத்தின் மத்தியில் நீதி விசாரணைப் பொறிமுறை விடயத்தில் இலங்கைக்கு விரோதமாக அமெரிக்கா கண்டிப்பான போக்கைக் கடைப்பிடிக்கப் போவதில்லையென்பதே பொதுவான எதிர்பார்ப்பு ஆகும்.

இவ்விடயத்தில் இந்தியாவும் மென்போக்கையே கடைப்பிடிக்குமெனத் தெரிகிறது.

சர்வதேச நல்லுறவை முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சீராகப் பேணாத காரணத்தினால் அன்றைய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆசீர்வாதம் வழங்கிய பிராந்திய வல்லரசும் உலக வல்லரசும் இலங்கையின் இன்றைய அரசுக்கு நெருக்கடி நிலைமையை ஏற்படுத்தும் முடிவுகளுக்கு இடமளிக்கப் போவதில்லையென்பது நன்கு தெரிகிறது.

போர்க்குற்ற விசாரணையைப் பொறுத்தவரை தாமதமும் இழுத்தடிப்பும் தொடருமென்றே ஊகிக்கத் தோன்றுகிறது.

Tags: Featured
Previous Post

Multiple sclerosis நோய்க்கெதிராக புதுவகை சிகிச்சை

Next Post

உயிரணுவை தானம் தந்தால் ரூ. 67,000 அல்லது ஐபோன்

Next Post
உயிரணுவை தானம் தந்தால் ரூ. 67,000 அல்லது ஐபோன்

உயிரணுவை தானம் தந்தால் ரூ. 67,000 அல்லது ஐபோன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

மகிந்தவின் மகன் யோஷிதவின் வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

July 17, 2026
சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

July 17, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026

Recent News

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

மகிந்தவின் மகன் யோஷிதவின் வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

July 17, 2026
சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

July 17, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures