Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணிலை பதவியிலிருந்து நீக்க இதுவே காரணம்! மைத்திரி விசேட அறிவிப்பு

October 29, 2018
in News, Politics, World
0

தனது உயிரை பணயம் வைத்து 2015ஆம் ஆண்டு பெற்ற அரசியல் வெற்றியை கொச்சைப்படுத்தும் வகையில் நாகரிகமான அரசியலுக்கு பொருத்தமற்ற செயற்பாடுகளில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி தனது ஊடகப் பிரிவின் வழி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு என்னை பொது வேட்பாளராக தெரிவு செய்த போது நான் எதிர்நோக்கி ஆபத்தான நிலைமை உங்களுக்கு நினைவில் இருக்கும் என நம்புகிறேன். நாட்டு அரசியலில் எந்த நபரும் பொறுப்பேற்காக சவாலை நான் ஏற்றுக்கொண்டேன்.

அது பாரதூரமான அரசியல் சவால் என்பது போல் ஆபத்து நிறைந்தது. அரசியல் ரீதியாக மட்டுமல்ல? எனக்கு, எனது மனைவி, பிள்ளை என அனைவருக்கும் ஆபத்தான சூழ்நிலையில் அந்த சவாலை எதிர்கொண்டேன்.

அதேபோல் கடந்த 26ஆம் திகதி நான் எடுத்த தீர்மானம் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி எடுத்த தீர்மானத்தை விட மிகப் பெரிய சவாலுடனான தீர்மானம்.

உங்களதும், எனது அன்புக்குரிய தாய் நாட்டுக்காகவும் அன்பான பொது மக்களுக்காகவுமே இவை அனைத்தையும் நான் செய்தேன் என்பதை கூறிக்கொள்கிறேன்.

எனது உயிரை பணயம் வைத்து 2015ஆம் ஆண்டு பெற்ற அரசியல் வெற்றியை கொச்சைப்படுத்தும் வகையில் நாகரிகமான அரசியலுக்கு பொருத்தமற்ற செயற்பாடுகளில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டார்.

இலங்கையின் எதிர்காலத்தை அவர் அவருடன் நெருக்கமாக செயற்படும், மக்களின் உண்மையான இதய துடிப்பை அறியாத மேல் தட்டு வகுப்பினர் வினோத களியாட்டு இடமாக மாற்றும் நிலைமைக்கு அவர் சென்றார்.

குறிப்பாக நல்லாட்சி அரசாங்கம் என்ற எண்ணக்கருவை ரணில் விக்ரமசிங்க அழித்தார் என்ற நான் நினைக்கின்றேன்.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி நான் தேர்தலில் வெற்றி பெற்று மறு நாள் மாலை நான் பதவியேற்கும் போது நாடாளுமன்றத்தில் 47 உறுப்பினர்களை கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தேன்.

எனினும் அந்த உன்னதமான நல்லாட்சி எண்ணக்கருவையும் நல்லாட்சியின் நோக்கத்தையும் ரணில் விக்ரமசிங்க அழித்தார். நாட்டில் ஊழல், மோசடிகள் பெருமளவில் அதிகரித்தன.

அத்துடன் ரணில் விக்ரமசிங்க கூட்டாக முடிவுகளை எடுப்பதற்கு பதிலாக தனியாக தீர்மானங்களை எடுத்தார்.

மிகவும் முரட்டுத்தனமாக ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்குள் நடந்துக்கொண்டார். இதனால், அரசாங்கத்திற்குள் பாரதுரமான அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.

கூட்டாக முடிவுகளை எடுக்காது அவரும் அவருக்கு நெருக்கமான சிலரும் கலந்துரையாடி முடிவுகளை எடுத்தனர். இதன் காரணமாக நாடு என்ற வகையில் நாம் துரதிஷ்டவசமாக நிலைமைக்கு தள்ளப்பட்டோம்.

கடந்த மூன்றரை வருடங்களில் எனக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அரசியல் ரீதியான வேறுபாடுகள் ஏற்பட்டன. கொள்கை ரீதியான மோதல்களை நான் பார்த்தேன்.

ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் கொள்கைக்கும் எனது அரசியல் கொள்கைக்கும் இடையில் வேறுபாடுகளை கண்டேன். அவருக்கும் எனக்கும் இடையில் கலாசார வேறுபாடுகளை கண்டேன்.

இவை அனைத்தும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்தன எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Previous Post

இலங்கையில் உடனடியாக மாகாணசபை தேர்தல்!

Next Post

மஹிந்தவிற்கு ஆதரவு வழங்கியதன் காரணமென்ன?: டக்ளஸ்

Next Post

மஹிந்தவிற்கு ஆதரவு வழங்கியதன் காரணமென்ன?: டக்ளஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

July 12, 2026
ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

July 12, 2026
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

July 12, 2026
அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

July 12, 2026

Recent News

இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

July 12, 2026
ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

July 12, 2026
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

July 12, 2026
அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

July 12, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures