Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போர்ச்சுக்கல் நாட்டைத் தாக்கிய சூறாவளி புயல்: 3 லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் தவிப்பு

October 16, 2018
in News, Politics, World
0

லெஸ்லி புயலின் கடும் தாக்குதலில் போர்ச்சுக்கல்லின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின. புயல் தாக்கியதில் சுமார் 3 லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில் பேசுகையில், ” போர்ச்சுக்கல்லில் கடந்த சனிக்கிழமை லெஸ்லி புயல் தாக்கியது. இதில் போர்ச்சுக்கல்லின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் தாக்கத்தினால் 3 லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் பாதிப்படைந்து உள்ளனர்.

1000க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. நாட்டின் பல சாலைகள் முடக்கப்பட்டுள்ளன. 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் ” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

போர்ச்சுக்கல்லில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளாக லிஸ்பான், லைய்ரியா, கோய்ம்ரா, போர்டோ ஆகியவை அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்றும் போர்ச்சுக்கல் அரசு தெரிவித்துள்ளது.

Previous Post

அரை நிர்வாணப்படுத்திய உதவி ஆய்வாளருக்கு அபராதம்

Next Post

புயலில் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கிய விமானி!

Next Post

புயலில் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கிய விமானி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures