Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இளைஞர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சிறிலங்கா பெண் இராணுவத்தினர்

September 22, 2018
in News, Politics, World
0

சிறிலங்கா பெண் படை அதி­கா­ரி­க­ளினால் விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் போரா­ளி­கள் உள்­ளிட்ட தமிழ்க் கைதி­களை, பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்தப்பட்டுள்ளனர்.

ஜெனீ­வா­வில் நேற்­று­முன்­தி­னம் இந்த அதிர்ச்­சித் தக­வல் அம்­ப­லமாகியுள்ளது.

போர் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டது என்று அறி­விக்­கப்­பட்ட 2009ஆம் ஆண்டு முதல் இன்று வரை­யான காலப் பகு­தி­யில் தடுப்­புக் காவ­லில் வைத்து சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட நூற்­றுக்­கும் மேற்­பட்ட ஆண்­க­ளால் அம்­ப­லப்­ப­டுத்­தப்­பட்ட மிக­வும் பயங்­க­ர­மான தக­வல்­கள் அடங்­கிய அறிக்கை சட்ட நிபு­ணர் யஸ்­மின் சூகா தலை­மை­யி­லான உண்­மைக்­கும் நீதிக்­கு­மான செயற்­திட்­டத்­தால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

‘மௌனம் கலைந்தது – தப்பிவந்த ஆண்கள் போரை மையப்படுத்தி நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசுகின்றனர்என்ற அறிக்கை இலங்கையிலிருந்து தப்பிவந்த 121 தமிழ் ஆண்கள் வழங்கிய தகவல்களை மையப்படுத்தித் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

அதிர்ச்சியூட்டும் மிகவும் பயங்கரமான கொடூரங்கள் அடங்கிய இவ்வாறான தகவல்களை இதற்கு முன்னர் தான் கேள்விப்பட்டிருக்கவில்லை என்று யஸ்மின் சூகா தலைமையிலான உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் பகிரங்கப்படுத்திய, அறிக்கையை தயாரித்த பெல்ஜியம் லூவன் பல்கலைக் கழகத்தின் கலாநிதி ஹெலீன் குறிப்பிட்டார்.

‘உலக நாடுகளில் இடம்பெற்ற வன்முறைகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் தொடரும் கொடூரங்கள் மிகவும் மோசமானதாகக் காணப்படுகின்றது. பொஸ்னியா குறித்து ஆய்வு செய்திருக்கின்றேன்.

ஆனால் இலங்கையில் தடுப்புக் காவலில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டு, பல தடவைகள் பாலியல் வன்கொடுமைகள் குறித்த தகவல்களை கேள்விப்படும் போது மிகவும் மோசமான கொடூரத்தை உணர்கின்றேன். பலர் கட்டிவைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்களை நான் இதற்கு முன்னர் கண்டிருக்கவோ, கேள்விப் பட்டிருக்கவோ இல்லை. மிகவும் அதிர்ச்சியூட்டும் வகையிலான கொடூரங்களாக இவை இருக்கின்றன என்றார் ஹெலீன்.

ஜெனிவாவில் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு 14 வயதுடைய சிறுவனும் சாட்சியமளித்திருக்கின்றான். அதேவேளை அறிக்கைக்கு தகவல் வழங்கியவர்களில் வயது கூடிய ஆண் 40 வயதை கடந்த ஒருவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னை விசாரித்த புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பெண் அதிகாரி மிகவும் கொடூரமான முறையில் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

இராணுவ சீருடை அணிந்திருந்த அந்தப் பெண் அதிகாரி பொல்லுகளால் தாக்கியதுடன், தனது ஆண் உறுப்பை பாதணிக் கால்களால் மிதித்து, நூலைக் கட்டி இழுத்து துன்புறுத்தினார் என்றும், தமிழிலேயே அவர் கதைத்த போதிலும், அவர் சிங்களப் பெண் என்றும் கொடூரத்துக்கு முகம் கொடுத்த ஆண் தெரிவித்துள்ளார்.

சித்திரவதைக்கு உள்ளான மற்றுமொருவர் தெரிவித்த தகவல்களுக்கு அமைய, அவர் உள்பட தமிழ் ஆண்கள் அடங்கிய குழுவொன்றுக்கு, பெண் படை அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று இணைந்து சித்திரவதை செய்திருக்கின்றனர்.

‘பெண் பொலிஸ் அதிகாரிகள் நான்கு பேர் இருந்த அறைக்கு எம்மை ஆடைகளை களைந்து அழைத்துச் சென்றனர். இருவர் பொலிஸ் சீருடையான கட்டை பாவடை அணிந்திருந்ததுடன், மற்றைய இருவரும் சேலை அணிந்திருந்தனர். அவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண்என்றும் சித்திரவதைக்கு உள்ளான தமிழ் இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

சித்திரவதைகள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசு தொடர்ச்சியாக கூறிவருகின்றது. இலங்கை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை எடுத்த மாத்திரத்தில் நிராகரிப்பதன் ஊடாக விசாரணைகளை மூடி மறைப்பதையே வாடிக்கையாக அரசு கடைபிடித்து வருவதாக புதிய அறிக்கையை தயாரித்த கலாநிதி ஹெலீன் டூகே தெரிவிக்கின்றார்.

Previous Post

நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள காதல்…!

Next Post

விலங்குடன் உடலுறவு கொள்வது தவறில்லை

Next Post

விலங்குடன் உடலுறவு கொள்வது தவறில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures