எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை, நாட்டில் எரிபொருள் விலை குறைப்பு மேற்கொள்ளப்படமாட்டாதெனவும், உலக சந்தையில் எரிபொருள் விலை ஏற்றத்துக்கு அமைய, விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுமெனவும், அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19), இடம்பெற்றபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.













