Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாரீஸில் தொடரும் சோகம்: கட்டிடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 5 பேர் பலி

June 7, 2016
in News
0
பாரீஸில் தொடரும் சோகம்: கட்டிடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 5 பேர் பலி

பாரீஸில் தொடரும் சோகம்: கட்டிடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 5 பேர் பலி

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் உடல் கருகி 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரீஸில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் பாரீஸ் நகரமே ஸ்தம்பித்தது. ஆங்காங்கு ஏற்பட்ட விபத்துக்களில் 4 பேர் பலியாயினர்.

தற்போது வெள்ளத்தில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில், மேற்கு பாரீஸில் உள்ள Saint-Denis என்ற பகுதியில் மற்றொரு சோக சம்பவம் நிகழ்ந்ததுள்ளது.

இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்களுக்கு நேற்று மாலை 7.30 மணியளவில் தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கட்டிடத்திற்குள் நுழைந்து சோதனை செய்தபோது, இடுக்குகளில் சிக்கி 5 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளது தீயணைப்பு வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எனினும், அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களா என்பது குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

தீவிபத்து நிகழ்ந்தபோது 4-வது மாடியிலிருந்து ஜன்னல் வழியாக தீக்காயங்களுடன் குதித்த 9 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீயணைப்பு எங்கிருந்து தொடங்கியது என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளப் பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள் மீண்டு வரும் நிலையில், தற்போது தீவிபத்தில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags: Featured
Previous Post

நேபாளத்தின் தேசிய கீதத்திற்கு இசை அமைத்த அம்பர் குருங் இன்று காலமானார்

Next Post

லண்டனிலிருந்து மலேசியாவுக்கு பயணித்த விமானம் கடுமையாக குலுங்கியதால் பரபரப்பு

Next Post
லண்டனிலிருந்து மலேசியாவுக்கு பயணித்த விமானம் கடுமையாக குலுங்கியதால் பரபரப்பு

லண்டனிலிருந்து மலேசியாவுக்கு பயணித்த விமானம் கடுமையாக குலுங்கியதால் பரபரப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures