Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நிறைவு! தீர்ப்பு ஒத்திவைப்பு

June 7, 2016
in News, Politics
0
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நிறைவு! தீர்ப்பு ஒத்திவைப்பு

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நிறைவு! தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் ஜெயலலிதாவை விடுவித்ததை எதிர்த்து, கர்நாடக அரசு இந்த வழக்கைத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த பெப்ரவரி 23ம் திகதி தொடங்கியது. கடந்த வாரம் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.

மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறு நிறுவனங்கள் தங்கள் வாதங்களை இன்று முன்வைத்தன.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்திருப்பதால், நீதிபதி பி.சி. கோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் வரும் 10ம் தேதிக்குள் எழுத்து மூலமான தங்கள் வாதங்களை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் நீதிபதிகள் கூறினர்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 1991 – 96 காலகட்டத்தில் முதலமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு பொருந்தாத வகையில் 67 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்களைச் சேர்த்தார் என தொடரப்பட்ட வழக்கு கர்நாடக மாநிலத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

2014 செப்டம்பரில் இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அந்த மேல் முறையீட்டில் ஜெயலலிதாவும் மற்றையோரும் விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை, தற்போது ஜெயலலிதா வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும் கூட அநேகமாக ஆகஸ்ட் மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Featured
Previous Post

பிரித்தானிய நாட்டின் கொடூர குற்றவாளி: 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்

Next Post

ஐ.நாவில் மற்றுமொரு சவாலையும் கடக்குமா சிறிலங்கா?

Next Post
ஐ.நாவில் மற்றுமொரு சவாலையும் கடக்குமா சிறிலங்கா?

ஐ.நாவில் மற்றுமொரு சவாலையும் கடக்குமா சிறிலங்கா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures