வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவுக்கு இருவார கால ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் தங்கியிருந்து ஆன்மிகப் பயணத்தை அவர் மேற் கொள்வார் என்று தெரியவருகின்றது.
தமிழகத்தில் பல்வேறு அரசியல் சந்திப்புக்களிலும் அவர் ஈடுபடக் கூடும் என்று அறியமுடிகின்றது.
வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
