Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திடீர்னு ஜெ. வீடியோவை ரிலீஸ் செய்துட்டாரே :கொந்தளிப்பில் சசிகலா குடும்பம்!

December 20, 2017
in News, Politics, World
0

ஜெயலலிதா வீடியோ வெளியான விவகாரத்தில் தினகரன் மீது ஒட்டுமொத்த சசிகலா குடும்பமுமே கடும் கொந்தளிப்பில் இருக்கிறது. இதனைத்தான் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா வெளிப்படுத்தியிருக்கிறார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காலத்தில், சசிகலா, இளவரசி ஆகியோர் மட்டுமே அந்த அறைக்குப் பக்கத்தில் தங்கியிருந்தனர். கார்டனில் இருந்து சென்ற பிறகு, ஓரிருநாள் கழித்தே கண்விழித்தார் ஜெயலலிதா. அந்தநேரத்தில் ஜெயலலிதா எப்படி இருக்கிறார் என்ற பதட்டம் அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் நிலவியது. இந்தப் பதட்டத்தை அப்போலோ அறிக்கைகள் அவ்வப்போது தணித்துக் கொண்டிருந்தன.

ஜெயலலிதாவைப் பாதுகாத்து வந்த என்.எஸ்.ஜி வீரர்களும் டெல்லிக்குத் திரும்பிவிட்டனர். ஜெயலலிதாவின் நிலை குறித்து மிகவும் ரகசியமாகவே வைத்துக் கொண்டது அப்போலோ. மத்திய அரசின் பிரதிநிதிகளும் ஜெயலலிதா தொடர்பான விஷயங்கள் வெளியே வராமல் பார்த்துக் கொண்டனர்.
இந்த விவகாரம் தங்களுக்கு எதிராக திரும்பலாம் என்பதை உணர்ந்த சசிகலா குடும்பத்து வாரிசு ஒருவர், நாளை நம் மீதுதான் அனைத்துப் பழிகளும் வந்து சேரும். உங்களோடு அம்மா இயல்பாக பேசும் வீடியோக்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நாளை ஏதேனும் பிரச்னை வந்தால்கூட மக்களுக்குப் புரிய வைக்கலாம் எனக் கூற, அதுவும் சரிதான் என தனது ஐபோனிலேயே மூன்று வீடியோக்களை எடுத்தார் சசிகலா.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்ட நேரத்தில், இளவரசி குடும்பத்தை அழைத்தார் சசிகலா. யாரிடம் கொடுத்தாலும் எனக்கு நம்பிக்கை வராது. உங்களிடம் இருந்தால் ரகசியம் காப்பாற்றப்படும் என உறுதியாக நம்புகிறேன்’ எனக் கூறி இந்த வீடியோக்களை ஒப்படைத்தார் சசிகலா.

இந்த வீடியோ இருக்கும் இடமும் விவேக் உள்பட ஒரு சிலருக்கு மட்டுமே தெரியுமா. ஆகையால் வீடியோ ரிலீசானதும் ஒட்டுமொத்த சசிகலா குடும்பமே கொந்தளித்துவிட்டதாம்.

ஒடிஷாவில் இருக்கும் விவேக் சசிகலாவுக்கு விவரங்களை பாஸ் செய்து தமக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என பதற்றத்துடன் கூறியிருக்கிறாராம். அதேநேரத்தில் விவேக்கின் சகோதரி கிருஷ்ணபிரியாவும் ரொம்பவே கொந்தளித்து போய்விட்டார்.

இதன் முதல் கட்டமாகத்தான் தினகரன் மீதான கோபத்தைக் காட்டும் வகையில் ஃபேஸ்புக் பதிவை போட்டிருந்தார் கிருஷ்ணப்பிரியா. அத்துடன் செய்தியாளர்களையும் அழைத்து, தினகரன் மீதான கோபத்தை கொட்டித் தீர்த்துவிட்டார் கிருஷ்ணப்பிரியா. அடுத்தடுத்து தினகரனுக்கு எதிராக வரிந்து கட்டுகிறார்களாம் சசிகலா குடும்பத்து இளைஞர் அணி.

Previous Post

ரயில் விபத்தில் துண்டிக்கப்பட்ட கால்களை மீண்டும் பொருத்தி சாதனை!

Next Post

மாவையின் மகனும் தேர்தல் களத்தில்

Next Post

மாவையின் மகனும் தேர்தல் களத்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures