பாகிஸ்தானில் 2018-ல் நடக்க உள்ள பொது தேர்தலில் ஹபீஸ் சையத்துடன் முஷாரப் கூட்டணி சேர உள்ளார்
பாகிஸ்தானுக்கு 2018-ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் முன்னாள் அதிபர் முஷாரப் 20-க்கும் மேற்பட்ட கட்சிகளை இணைந்து மெகா கூட்டணி அமைக்க வியூகம் வகுத்து வருகிறார். இந்நிலையில் 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கரே தொய்பா பயங்கரவாதி ஹபீஸ் சையத்துடன் முஷராப் கூட்டணி சேர உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் பேட்டியளித்த முஷராப் தாம் லஷ்கரே தொய்பா அமைப்பின் தீவிர ஆதரவாளன் என கூறிவந்தார்.
இந்நிலையில் முஷாரப்புடன் கூட்டணி குறித்து ஹபீஸ் ஆஜ் நியூஸ் டி.விக்கு அளித்தபேட்டியில், முஷராப் எங்களுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார் அதனை நாங்கள் வரவேற்போம்.முஷராப்பின் இந்த கூட்டணி முடிவு பாகிஸ்தானுக்கு ஆபத்தானது என அந்நாட்டு சில பெரிய கட்சிகள் விமர்சித்து வருகின்றன.