Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பல்கலை. மாணவர் மீதான சூட்டுச் சம்பவத்தில் கைதான பொலிஸாருக்குப் பிணை!!

September 14, 2017
in News
0
பல்கலை. மாணவர் மீதான சூட்டுச் சம்பவத்தில் கைதான பொலிஸாருக்குப் பிணை!!

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் பல்கலைக் கழக இரு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 பொலிஸாருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நடைபெற்றது. அதன்போதே பொலிஸார் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆம் திகதி யாழ்ப்­பாணம் காங்கேசன்துறை வீதி குளப்­பிட்டி பகு­தியில் பொலி­ஸாரின் துப்­பாக்கி சூட்டில் யாழ்.பல்­க­லை­க­ழக மாண­வர்கள் இருவர் உயிரிழந்தனர்.
யாழ்.பல்கலைகழக அரசறிவியல்துறை மாணவனான நடராஜா கஜன் (வயது 23) மற்றும் ஊடகக்கற்கை மாணவனான பவுண்ராஜ் சுலக்சன் (வயது 24) ஆகிய இரு மாணவர்களுமே உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டது. குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­ன­ரது விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் சம்­பவ இடத்தில் இருந்து துப்­பாக்கி ரவைகளின் வெற்­றுதோட்டாக்கள் மீட்­கப்­பட்­டி­ருந்­தன.
சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்.பொலிஸ் நிலை­யத்தின் ஐந்து பொலிஸ் அதி­கா­ரிகள் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்ற உத்­த­ர­வுக்­க­மைய அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் விளக்­க­ம­றியில் வைக்­கப்­பட்டனர்.
அவர்கள் கடந்த 11 மாதங்களாகத் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலா இரண்டரை லட்சம் ரூபா பெறுமதியான இரு ஆள்பிணை, 50 ஆயிரம் ரூபா ஆள் பிணையில் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் கையொப்பம் இட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அவர்கள் வெளிநாடு செல்லத் தடையும் விதிக்கப்பட்டது.
பொலிஸாரின் கடவுச் சீட்டுக்களை நீதிவான் மன்றில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Previous Post

விசமிகளால் அந்தோனியார் திருச் சொரூபம் உடைப்பு

Next Post

சிவாஜிலிங்கம் தலைமையிலான குழு ஜெனிவா சென்றடைந்தது.

Next Post

சிவாஜிலிங்கம் தலைமையிலான குழு ஜெனிவா சென்றடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures