மேற்கிந்திய பிரெஞ்சு தீவுகளுக்கான அரசு எந்த நடவடிக்கையும் திட்டமிடவில்லை என தேசிய முன்னணி கட்சி தலைவர் மரீன்-லூ-பென் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
கோடை விடுமுறையை முடித்துக்கொண்டு, நேற்று சனிக்கிழமை தனது அரசியல் பணிகளுக்கு திரும்பிய மரீன்-லூ-பென், Haute-Marne இன் Brachay இல் ஆதரவாளர்களுக்கான மிகப்பெரும் சந்திப்பொன்றை நிகழ்த்தினார். அதன் போது, அரடின் மேல் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். மேற்கிந்திய பிரெஞ்சு தீவுகளான Saint-Barthélemy மற்றும் Saint-Martin ஆகிய தீவுகளில் ஏற்பட்ட Irma சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தத்துக்கு அரசு எந்த வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்.
சூறாவளியின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆதரவினை தெரிவித்த மரீன்-லூ-பென், அவர்களுக்கான பாதுகாப்பையும் நல்வாழ்வினை ஏற்படுத்த அரசு தவறியுள்ளது!’ என குறிப்பிட்டுள்ளார்.