Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

48 மணி நேர போர் நிறுத்தத்திற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன் – பொன்சேகா!

May 2, 2017
in News
0
48 மணி நேர போர் நிறுத்தத்திற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன் – பொன்சேகா!

இறுதிக்கட்ட போரின் போது அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான 48 மணி நேர போர் நிறுத்த உடன்படிக்கைக்கு தான் உடன்படவில்லை என முன்னாள் இராணுவ தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பொரளையில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே சரத் பொன்செகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

2009ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி 48 மணி போர் நிறுத்தத்தை அறிவித்தார். பொது மக்கள் தமிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாட வேண்டும் என தெரிவித்து போர் நிறுத்த உடன்படிக்கை அறிவிக்கப்பட்டது.

எனினும், அந்த காலக்கட்டத்தில் இராணுவ தளபதியாக செயற்பட்ட தாம் அப்போதைய அரசாங்கத்தை போர் நிறுத்தத்திற்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தியிருந்தேன்.

போர் நிறுத்தம் காரணமாக, பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினரை இழந்து விட்டதாகவும் சரத் பொன்சேகா இதன் போது தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், 2009ம் ஆண்டு மே மாதம் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகளை இராணுவம் தோற்கடித்திருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும் : பொன்சேகா ஆதங்கம்

கடந்த 2005 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறும் நோக்குடன் மஹிந்த ராஜபக்ஸ புலிகளுக்கு 2 மில்லியன் ரூபா பணம் வழங்கியதாகவும், இதற்காக அவரை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும் எனவும் அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தபோது மீதெட்டமுல்ல குப்பை மேடு 15 உயரத்தில் காணப்பட்டதாகவும், ஆட்சியை தற்போதைய அரசிடம் அவர் கையளித்தபோது, அந்த குப்பை மேட்டின் உயரம் 45 மீற்றராக காணப்பட்டதாகவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தற்போதைய அரசின் ஆட்சியில் 3 மீற்றர்களுக்கு மட்டுமே மீதெட்டமுல்ல குப்பை மேடு உயர்ந்ததாகவும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

மீதெட்டமுல்ல குப்பை மேடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவம் என்றும், அதனை தற்போதைய அரசின் மீது சுமத்த முயற்சிக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுப்பதாகவும் பொன்சேகா கூறியுள்ளார்.

தொழிலாளர்களின் வயிற்றில் அடித்ததே மஹிந்தவின் சாதனை : போட்டுத்தாக்குகிறார் பொன்சேகா!

ஆசியாவின் ஆச்சரியம் என்று கூறித் தொழிலாளர்களின் வயிற்றில் அடித்ததே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாதனையாகும் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எமது நாட்டின் பொருளாதாரத்தின் 80வீதம் தொழிலாளர்களின் உழைப்பில்தான் தங்கியுள்ளது.

எமது நாட்டின் தொழிலாளர் வர்க்கம்தான் உலகங்கெங்கிலும் இருந்து அந்நியச் செலவாணியைப் பெற்றுக்கொடுக்கின்றனர்.

வினைத்திறனற்ற செயற்பாடுகளால் கடந்த அரசால் தொழிலாளர்களுக்கான ஒரு சிறந்த தேசிய வேலைத்திட்டத்தை உருவாக்க முடியாது போனது.

தற்போதைய தொழில் அமைச்சர், கோட்டாபய ராஜபக்ஷ போல் செயற்படாது தொழிலாளர்களுக்கான தேசிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

எமது நாட்டில் பல்வேறு தொழில்களின் அடிப்படையில்தான் பொருளாதார அபிவிருத்தியும் நோக்கங்களும் நிறைவேற்றிக்கொள்ளப்படுகின்றன.

ஆனால், வினைத்திறனற்ற செயற்பாடுகளால் அவை வீழ்ச்சியடைந்தன. இதனால் பாதிக்கப்பட்டது ராஜபக்ஷாக்கள் அல்லர்.

வேலைசெய்யும் மக்களின் பொருளாதரமே வீழ்ச்சியடைந்தது. ஆசியாவின் ஆச்சரியமாக இந்த நாட்டை மாற்றுவோம் என்று கூறி மக்களின் கையில் ஒருசதம் கூட இல்லாம் செய்தமையே ராஜபக்ஷாக்களின் பொருளாதார இலக்குகளாக இருந்தன.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இந்த நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வந்தோம். மீண்டும் மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்க அனுமதியளிக்கமாட்டோம்.

நாட்டை ஆட்சிசெய்ய முடியாவிடின் எங்களிடம் ஒப்படைக்கும்படி ராஜபக்ஷ கேட்கிறார்.

அவரின் ஆட்சியின் கேவலம் இந்த நாட்டு மக்களுக்குத் தெரியாதா? மக்கள் இனிமேல் அவரின் ஆட்சிக்கு இடமளிக்கமாட்டார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Featured
Previous Post

ஒற்றையாட்சியைப் பாதுகாக்கும் வகையிலேயே அதிகாரப் பகிர்வு!

Next Post

தமிழகத்தில் பாஜகவின் பலே திட்டம்: முதலமைச்சர் வேட்பாளர் யார் தெரியுமா?

Next Post
தமிழகத்தில் பாஜகவின் பலே திட்டம்: முதலமைச்சர் வேட்பாளர் யார் தெரியுமா?

தமிழகத்தில் பாஜகவின் பலே திட்டம்: முதலமைச்சர் வேட்பாளர் யார் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026

Recent News

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures