Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரபாகரனின் மரணத்தை ஏற்றுக் கொள்ளாத அரசு! : இரகசியம் வெளிவருமா?

April 28, 2017
in News
0

காணாமல் போனோருக்கு மரண சான்றிதழ் கொடுத்த பின்னர் அவர்கள் மீண்டும் வந்து விட்டால் என்ன செய்வது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

நேற்றைய ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியிருந்தார். மேலும்,

காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் கொடுப்பது சாத்தியமற்றது. 1976ஆம் ஆண்டு முதலாக இந்தப் பிரச்சினை தொடருகின்றது. பல நீதிச் சிக்கல்கள் இதில் உள்ளன.

ஒருவருக்கு மரணசான்றிதழ் கொடுத்து விட்டால். அவர் இறந்தவராக கருதப்படுவார் நீதியின் படி ஒன்றும் செய்ய முடியாது.

அப்படி மரண சான்றிதழ் கொடுத்து விட்ட பின்பு அவர் மீண்டும் வந்து விட்டால் அப்படியானவரை ஒன்றுமே செய்ய முடியாது. சட்டத்தின் முன்னால் அவர் இறந்த ஒருவர்.

அரசிற்கு ஒன்றும் மரண சான்றிதழ் வழங்கி வைப்பது அத்தனை கடினமான விடயம் அல்ல. எனினும் இதில் பல பிரச்சினைகள் உள்ளன எனவும் ராஜித தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் இந்தக் கூற்றுகள் நடைமுறை அரசியலுக்கு பொருத்தமற்றதாக காணப்படுவததோடு, உள்நோக்கத்துடன் தெரிவிக்கப்பட்டதாகவே கூறப்படுகின்றது.

அதாவது, இலங்கை யுத்தத்தில் கொல்லப்பட்டதாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட பலருக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை.

ஒட்டு மொத்த இலங்கை மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் அப்போதைய இப்போதைய அரசு கூறும் செய்தி விடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட பல முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டதாக.

எனினும் இதுவரையில் மரணசான்றிதழ் கொடுக்கப்படவில்லை. குறித்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இல்லை. ஏற்கனவே இந்த விடயம் காணாமல் போனோர் அலுவலத்திலும் கூட முறைப்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஆனாலும் இது வரை அரசு தரப்பிடம் இருந்து பதில்களோ அல்லது பெரிதாக பேசப்படுவதோ இல்லை. பாராளுமன்றத்திலும் கூட இந்த விடயம் பேசப்பட்ட போதும் பதில்கள் கொடுக்கப்படவில்லை.

ஒரு வகையில் இலங்கை அரசியல் வாதிகள் மீண்டும் புலிகள், விடுதலைப் புலிகள் என மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்திக் கொண்டு வருவதற்கும் இந்த விடயம் பிரதான காரணமாக அமைகின்றது.

அதேபோன்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பல இரகசியங்களை விரைவில் வெளிப்படுத்துவேன் என்றார். ஆனால் இது வரை மௌனமே.

இப்போதைய ஜனாதிபதியும் கடந்தகால பல இரகசியங்களை வெளியிடுவேன் எனத் தெரிவித்திருந்தார் என்றாலும் கூட அவரும் இதுவரையில் பேச வில்லை.

அவர்கள் மறைத்து வரும் இரகசியம் எது? அதேபோல் புலிகள் தரப்பில் கொல்லப்பட்டதாக கூறப்படுபவர்களுக்கு மரண சான்றிதழ்களை ஏன் கொடுக்க வில்லை? இந்தக் கேள்விகளுக்கு அரசு தரப்பு பதில் கூறவில்லை.

என்ற போதும் அரசு தரப்பு ஒரு வகையில் இறுதி யுத்தம் தொடர்பிலான இரகசியத்தை ஓர் பொக்கிஷமாகவே இது வரை காத்துக் கொண்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.

போர்க் குற்றமாக இருக்கட்டும், இலங்கை பயங்கரவாத சட்டமாக இருக்கட்டும், பல பிரச்சினைகளுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட முக்கியஸ்தர்களின் மரண சான்றிதழ்கள் தீர்வு கொடுக்கும்.

என்றாலும் தொடர்ந்து அரசியல் வாதிகளும், அரசு தரப்பும் ஆடி வரும் கண்ணாம்பூச்சி ஆட்டத்தின் மூலம் இப்போதைய அரசு விடுதலைப்புகளின் தலைவர் உட்பட பலரின் இறப்புகளை நம்பவில்லை என்றே கூறப்படுகின்றது.

அதே சமயம் முன்னாள் இலங்கை வெளியுறவு அமைச்சர் லட்சுமன் கதிர்காமர் கொலை வழக்கை முடிக்க, கொழும்பு நீதிமன்றம் 2009ஆம் ஆண்டுகளில் பிரபாகரனின் மரணச் சான்றிதழை கோரியது.

இந்திய தரப்பிலும் ராஜீவ் காந்தி வழக்கை மரணச்சான்றிதழை கேட்டுக் கொண்டு வந்தது எனினும் அவை கொடுக்கப்பட வில்லை.

மற்றும் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் பிரபாகரன் தொடர்பில் 2016ஆம் ஆண்டு வெளியிட்ட கருத்தினால்..,

இறுதிக்கட்டத்தில் பிரபாகரன் உயிருடன் இருந்தாரா?, போர் முறைமைக்கு முரணான வகையில் அவர் கொல்லப்பட்டாரா? என்பது கண்டறியப்படும் என அரசாங்கம் அப்போது தெரிவித்தது.

ஆனாலும் இன்றுவரை நடைமுறைக்கு சாத்தியப்படவில்லை. எனினும் விடுதலைப் புலிகள் தொடர்பில் மகிந்த உட்பட பலரது இப்போதைய கருத்து போர் முடிவுற்ற போது கூறியவற்றிக்கு சற்று முரண்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கை அரசியல் சதுரங்க ஆட்டங்களுக்கு விடுதலைப் புலிகளும் இன்றளவும் பகடைக்காய்களாக பயன்படுத்தப்பட்டு கொண்டு இருப்பதாகவே அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இப்போதைய அரசு விடுதலைப்புலிகள் மீதான யுத்தம் நிறைவுக்கு கொண்டு வந்து விட்டதையும், புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதையும் ஒத்துக்கொண்டு அடுத்த கட்ட செயற்பாடுகளை ஆரம்பிக்காமல் ஏன் இழுபறியாக வைத்துள்ளது?

மரண சான்றிதழ்களை வழங்குவது அத்தனை கடினமான விடயம் அல்ல எனும் அரசு தரப்பு ஏன் பிரபாகரனின் மரணத்தை ஒத்துக் கொள்ள வில்லை என்பது தெரியாத விடயம்.

அதேபோல் ஆரம்பத்தில் பிரபாகரனின் மரணம் தொடர்பில் கருத்து வெளியிட்டு வந்த அனைவரும் இப்போது மாற்றுக் கருத்துகளை தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.

ஆக மொத்தம் ஓர் மிகப்பெரிய இரகசியத்தை அரசியல் இலாபங்களுக்காக தொடர்ந்தும் அரசுகள் பேணிக்கொண்டு வருகின்றது. என்பது ஆரம்பம் முதல் இப்போது வரை அரசியல் வாதிகளின் கூற்றுகளில் இருந்து தெளிவாகின்றதாக கூறப்படுகின்றது.

Tags: Featured
Previous Post

வேண்டுகோளா? வேண்டுகோள் கலந்த உத்தரவா? மைத்திரியின் சதுரங்க வேட்டை?

Next Post

தினகரனை சென்னைக்கு அழைத்து வந்தது ஏன்? அலறும் அடையாறு வீடு

Next Post
தினகரனை சென்னைக்கு அழைத்து வந்தது ஏன்? அலறும் அடையாறு வீடு

தினகரனை சென்னைக்கு அழைத்து வந்தது ஏன்? அலறும் அடையாறு வீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

நாமலுக்கு அஞ்சுகிறார் ஜனாதிபதி அனுர : ஜோன்ஸ்டன்

July 15, 2026
கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

July 14, 2026
வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

July 14, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை – சபாநாயகர் தெரிவிப்பு

July 14, 2026

Recent News

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

நாமலுக்கு அஞ்சுகிறார் ஜனாதிபதி அனுர : ஜோன்ஸ்டன்

July 15, 2026
கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

July 14, 2026
வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

July 14, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை – சபாநாயகர் தெரிவிப்பு

July 14, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures