Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐயோ எத்தனை கோடி கொடுத்தாலும் என்ர பிள்ளைகளுக்கு ஈடாகுமா? யாழில் கதறி அழுத தாய்.

March 6, 2017
in News
0

ஐயோ எத்தனை கோடி கொடுத்தாலும் என்ர பிள்ளைகளுக்கு ஈடாகுமா? யாழில் கதறி அழுத தாய்.

ஐயோ…..நான் என்ர மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்திற்று நிற்கிறேனே, எத்தனை கோடிகள் கொடுத்தாலும் என்ர பிள்ளைகளுக்கு ஈடாகுமா? என கேட்டு தாயொருவர் அழுத காட்சி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துவிட்டது.

கடந்த-2009 ஆம் ஆண்டு மே மாத இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்ட தனது மூன்று பிள்ளைகளின் நிலை என்ன? எனக் கேட்டு ஒரு தாய் யாழில் கண்ணீர் விட்டுக் கதறி அழுத காட்சி காண்போரின் கண்களையும் மிகவும் கலங்க வைத்தது.

வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் “ஜனாதிபதியைக் கேளுங்கள்” அலுவலகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுத் திறந்து வைத்தார்.

இதன் போது ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் வலி.வடக்கு காணிகள் விடுவிப்பு ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் காணாமல் போகச் செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயின் புலம்பல் இது,

1

“ஐயோ… எங்கட பிள்ளைகளை எங்கே வைச்சிருக்கிறீங்க? , ஐயோ…..எங்கட பிள்ளைகளை விடுங்கோ, ஜெனிவாவே, இவர்கள் சொல்லுறதெல்லாம் பொய், இவங்கட வார்த்தைகளை நம்பாதீங்க, இங்க எங்கட தாய்மார் அழுகிற கண்ணீரைப் பாருங்கோ, ஐயோ…ஆட்கள் கழுவுற மாதிரிக் கண்ணீர் ஓடுதே!, ஜெனிவாவே இந்த மார்ச் மாதம் எண்டாலும் எங்களுக்கு நல்ல தீர்வைக் கொடுப்பீங்களோ!.

நல்ல தீர்வைக் கொடுங்கோ… இப்பவும் எங்களுக்கு அநியாயம் தான் நடக்குது. நான் உண்மையெல்லாத்தையும் சொன்னால் என்னைக் கொண்டு போயிடுவாங்க, ஐயோ இனி என்னத்த நான் சொல்ல….என்னத்த நான் சொல்ல…., ஐயோ…எங்கட கண்கண்ட செல்வங்களக் கொடுத்தோமே!, ஐயோ…ஒரு பிள்ளையைப் பெற்று வளர்க்க எவ்வளவு பாடுபடுகிறோம்.

ஐயோ…..நான் என்ர மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்திற்று நிற்கிறேனே, எத்தனை கோடிகள் கொடுத்தாலும் என்ர பிள்ளைகளுக்கு ஈடாகுமா?

எங்களுக்கு நல்லது செய்வோம் என்று கூறித் தானே எங்களிடம் வாக்குகள் பெற்றீர்கள்…. அதன்படி எங்கட பிள்ளைகளை விடுங்கோ…எங்கட பிள்ளைகளை விடுங்கோ….எனக் கூறிக் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.

இதேபோன்று இன்னும் பல தாய்மார் காணாமல் செய்யப்பட்ட தங்கள் பிள்ளைகளும், உறவுகளும் எங்கே? எனக் கேட்டுக் கதறி அழுதமை அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதேவேளை, தற்போது ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுக்களும், அழுத்தங்களும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கதறல் ஒலிகளும் ஜெனிவாவில் எதிரொலித்து உரிய பதில் வழங்கப்பட வேண்டும்,நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதே பலருடையதும் எதிர்பார்ப்பாகும்.

Previous Post

இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கும் சர்வதேசம்!

Next Post

நீண்ட நாட்களின் பின்னர் யாழில் தாழப்பறந்த உலங்கு வானூர்தி!

Next Post
நீண்ட நாட்களின் பின்னர் யாழில் தாழப்பறந்த உலங்கு வானூர்தி!

நீண்ட நாட்களின் பின்னர் யாழில் தாழப்பறந்த உலங்கு வானூர்தி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

நாமலுக்கு அஞ்சுகிறார் ஜனாதிபதி அனுர : ஜோன்ஸ்டன்

July 15, 2026
கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

July 14, 2026
வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

July 14, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை – சபாநாயகர் தெரிவிப்பு

July 14, 2026

Recent News

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

நாமலுக்கு அஞ்சுகிறார் ஜனாதிபதி அனுர : ஜோன்ஸ்டன்

July 15, 2026
கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

July 14, 2026
வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

July 14, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை – சபாநாயகர் தெரிவிப்பு

July 14, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures