Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சசிகலாவின் பேச்சால் ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு! தமிழ் நாட்டில் நாளை எதுவும் நடக்கலாம்?

February 12, 2017
in News
0
சசிகலாவின் பேச்சால் ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு! தமிழ் நாட்டில் நாளை எதுவும் நடக்கலாம்?

சசிகலாவின் பேச்சால் ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு! தமிழ் நாட்டில் நாளை எதுவும் நடக்கலாம்?

தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுக்காமல் காலம் தாழ்த்தி அதிமுக-வை உடைக்க முயற்சிப்பதாக சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாளை எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

அதிமுக எம்எல்ஏ-க்கள் சிறைவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் கோல்டன் பே ரெசார்ட்டுக்கு சென்ற சசிகலா அங்கிருந்தவர்களுடன் மூன்று மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அதிமுக குடும்ப உறுப்பினர்களை சந்தித்துவிட்டு வந்தேன், அவர்கள் மன உறுதியுடன் உள்ளனர்.

ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது அதிமுக-வை பிளவுபடுத்தும் செயல்.

இதேவேளை ஓரளவுக்கு மேல்தான் நாம் பொறுமையை கையாள முடியும். அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம் என்று போயஸ் கார்டனில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆவேசமாக கருத்து வெளியிட்டிருக்கிறார்.

இந்நிலையில், இன்று திடீரென தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் வீட்டிற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக காபந்து முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு நிமிசத்திற்கும் நிமிசம் ஆதரவு பெருகிவருகிறது.

இதற்கிடையில், வேண்டுமென்றே இந்த இழுத்தடிப்பை செய்து அதிமுக-வை பிரிக்கப்பார்க்கிறார்கள். இது திட்டமிட்ட சதி. இவற்றை முறியடிப்போம். நாளை என்ன வேண்டுமானாலும். நடக்கலாம். பொறுத்திருந்திருந்து பாருங்கள் என்றும் சசிகலா தெரிவித்திருப்பதால், மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆளுநர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இதேவேளை தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, சென்னையில் 12 இடங்களில் போலீசார் வாகன அணி வகுப்பு நடத்தவுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எவ்வாறாயினும் சசிகலாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கிற்கான தீர்ப்பு திங்கள் அல்லது செவ்வாய் வெளிவரும் என்கிறார்கள். அது அவருக்கு பாதகமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் தான் தீர்ப்பு வருவதற்கு முன்னர் ஏதோ தமிழகத்தில் நடைபெறப்போகின்றது என்கிறார்கள்.

அது கலவரமா? அல்லது ஜெயலலிதா சமாதிக்கு முன்னால் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் உண்ணாவிரதமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஏனெனில் சசிகலாவின் பேட்டியை அடுத்து, நாளை தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கலவரம் வெடிக்கலாம் என்று ஒரு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் பேசிவருகின்றனர்.

இன்னொரு தரப்பினரோ நாளை சசிகலா அம்மா சமாதிக்கு முன்னால் உண்ணாவிரதம் இருக்கக் கூடும் என்றும் எதிர்வு கூறுகின்றார்கள்.

எப்படியாயினும் சசிகலா சொன்னது போல நாளை வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நாளை சென்னையில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்?

Tags: Featured
Previous Post

கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை விசாரணை நடத்திய ஊடகம்? மக்கள் குழப்பம்

Next Post

ஓரளவுக்குத்தான் பொறுமை! செய்ய வேண்டியதை செய்வோம்! சசிகலா ஆவேசம்

Next Post
ஓரளவுக்குத்தான் பொறுமை! செய்ய வேண்டியதை செய்வோம்! சசிகலா ஆவேசம்

ஓரளவுக்குத்தான் பொறுமை! செய்ய வேண்டியதை செய்வோம்! சசிகலா ஆவேசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

உலகச் சந்தை விலை அதிகரிப்பால் உள்நாட்டில் தற்காலிக எரிபொருள் விலை மாற்றம்!

May 31, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

May 31, 2026

Recent News

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

உலகச் சந்தை விலை அதிகரிப்பால் உள்நாட்டில் தற்காலிக எரிபொருள் விலை மாற்றம்!

May 31, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

May 31, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures