Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடைசியில் கோட்டை விட்ட இலங்கை… டி20 போட்டியாக மாறிய ஒரு நாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா அசத்தல்

February 8, 2017
in News, Sports
0
கடைசியில் கோட்டை விட்ட இலங்கை… டி20 போட்டியாக மாறிய ஒரு நாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா அசத்தல்

கடைசியில் கோட்டை விட்ட இலங்கை… டி20 போட்டியாக மாறிய ஒரு நாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா அசத்தல்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியை சந்தித்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகளுக்கிடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

துவக்க வீரரான ஆம்லாவை குமரா 1 ஓட்டத்தில் ஆரம்பத்திலே வெளியேற்றி தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய டூபிலிசிஸ் ஆரம்பத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இவருக்கு ஈடுகொடுத்த மற்றொரு துவக்க வீரர் டிகாக் அரைசதம் கடந்து 55 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதற்கு அடுத்து வந்த டிவில்லியர்சுடன், டூபிலிசிஸ் இணைந்து வானவேடிக்கை நிகழ்த்தினார்.

இருவரும் இலங்கை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இதனால் டிவில்லியர்ஸ் அரைசதம் கடந்து 64 ஓட்டகங்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டுமினி 20 ஓட்டம் எடுத்து வெளியேறினர்.

ஒரு புறம் தென் ஆப்பிரிக்கா அணியின் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் டூபிலிசிஸ் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை விட்டபாடில்லை. இறுதியில் சதம் கடந்து 185 ஓட்டங்கள் எடுத்த போது மடுசன்கா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

தென் ஆப்பிரிக்கா அணி இறுதியாக 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 367 ஓட்டங்கள் குவித்து இலங்கை அணிக்கு ஒரு கடினமான இலக்கை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

கடின இலக்கை விரட்டுவதற்கு துவக்க வீரர்களாக டிக்வெல்லா மற்றும் தரங்கா களமிறக்கப்பட்டனர். இருவரும் அதிரடி காட்ட, இலங்கை அணியின் ஓட்டம் மளமளவென உயர்ந்தது. இதனால் இலங்கை அணி 58 பந்தில் முதல் விக்கெட்டுக்கு 100 ஓட்டங்கள் எடுத்து விக்கெட் இழப்பின்றி அருமையாக ஆடி வந்தது.

139 ஓட்டங்கள் எடுத்த போது அரைசதம் கடந்த டிக்வெல்லா 58 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மெண்டிஸ் தன் பங்கிற்கு 29, வீரக்கொடி 58 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினர். இதனால் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு அருமையான வாய்ப்புகள் இருந்தன.

இருப்பினும் அடுத்து வந்த வீரர்கள் சில்வா 5, குணரத்னே 38 ஓட்டங்கள் என வெளியேற இலங்கை அணி சற்றுத்தடுமாறியது. அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழக்க இதனால் இலங்கை அணி வெற்றி பெற வேண்டிய போட்டியில் 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ஓட்டங்கள் எடுத்து 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக துவக்க வீரர் தரங்கா 90 பந்தில் 119 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 4-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.

ஆட்ட நாயகனாக மைதானத்தில் வானவேடிக்கை நிகழ்த்திய டூபிலிசிசுக்கு வழங்கப்பட்டது. இப்போட்டியின் இறுதியில் டி 20 போட்டியில் எப்படி இருக்குமோ அது போன்று இருந்தது. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் இரு அணி வீரர்களும் வானவேடிக்கை நிகழ்த்தியதால், இது ஒரு நாள் போட்டியா, டி 20 போட்டியா என்று வர்ணையாளர்கள் வர்ணித்துள்ளனர்.

Previous Post

72 பந்துகளில் 300 ஓட்டங்கள்! டி20 போட்டியில் உலகசாதனை படைத்த வீரர்

Next Post

கேப்பாபுலவு மக்களுடன் கைகோர்த்த சிங்கள மக்கள்..! வலுபெறும் காணிவிடுவிப்பு போராட்டம்

Next Post
கேப்பாபுலவு மக்களுடன் கைகோர்த்த சிங்கள மக்கள்..! வலுபெறும் காணிவிடுவிப்பு போராட்டம்

கேப்பாபுலவு மக்களுடன் கைகோர்த்த சிங்கள மக்கள்..! வலுபெறும் காணிவிடுவிப்பு போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம் என்பதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது – அருட்தந்தை மா.சத்திவேல்

July 17, 2026

Recent News

நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம் என்பதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது – அருட்தந்தை மா.சத்திவேல்

July 17, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures