தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து தனது தளத்தில் பதிவிட்ட பாடகர் பயங்கரவாத தடுப்புசட்டத்தின் கீழ் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு இன்று(03.06.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து தனது தளத்தில் பதிவிட்ட கிளிநொச்சியை சேர்ந்த பாடகர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம்(02.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
சாவகச்சேரியில் வைத்து யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

அதன் பின்னர் கைது செய்யப்பட்டவர், சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.













