இலங்கைக்குள் குஷ் போதைப்பொருளுடன் நுழைய முயன்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்
50 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் அவ விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் இன்று (9.05.2026) கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்டவர் 37 வயதான புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்கவில் உள்ள விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

