Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரி20 உலகக் கிண்ணத்தில் வராலற்று வெற்றிக்கு குறிவைத்து இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதவுள்ளன

March 8, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரி20 உலகக் கிண்ணத்தில் வராலற்று வெற்றிக்கு குறிவைத்து இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதவுள்ளன

உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் 90,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியாவை நியூஸிலாந்து எதிர்த்தாடவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் வரலாற்று வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடன் களம் இறங்கவுள்ளன.

ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் சொந்த மண்ணில் சம்பியனான முதலாவது அணி, சம்பியன் பட்டத்தை தக்கவைத்த முதலாவது அணி, மூன்று தடவைகள் சம்பியனான முதலாவது அணி என்ற வரலாற்றுச் சாதனைகளை நிலைநாட்டும் குறிக்கோளுடன் இறுதிப் போட்டியை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா எதிர்கொள்ளவுள்ளது.

தென் ஆபிரிக்காவில் 2007இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ரி20 உலகக் கிண்ணப் போட்டியிலும் கடைசியாக ஐக்கிய அமெரிக்கா மற்றும் கரிபியன் தீவுகளில் கூட்டாக நடத்தப்பட்ட 9ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்திலும் சம்பியனான இந்தியா 4ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.

அதேவேளை, ரி20 உலகக் கிண்ணத்தை முதல் தடவையாக வென்றெடுக்கும் குறிக்கோளுடன் மிச்செல் சென்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து களம் இறங்கவுள்ளது.

துபாயில் 2021இல் நடைபெற்ற 7ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் அவுஸ்திரேலியாவிடம் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நியூஸிலாந்து, இரண்டாவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.

ரி20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவை எதிர்த்தாடிய 3 சந்தர்ப்பங்களிலும் நியூஸிலாந்து வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்திவந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.இந்தியாவை தென் ஆபிரிக்காவில் 2007இல் 10 ஓட்டங்களாலும் இந்தியாவில் 2016இல் 47 ஓட்டங்களாலும் துபாயில் 2021இல் 8 விக்கெட்களாலும் நியூஸிலாந்து வெற்றிகொண்டிருந்தது.

இந்த இரண்டு அணிகளும் ரி20 உலகக் கிண்ணத்தில் நான்காவது தடவையாக சந்திக்கும் போது நியூஸிலாந்து வெற்றி அலையைத் தொடரவும் இந்தியா தனது தோல்விகளுக்கு பதலடி கொடுக்கவும் முயற்சிக்கும் என்பது திண்ணம்.

இந்த இரண்டு அணிகளும் அரை இறுதிகளில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.

தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாடிய தென் அபிரிக்காவை, ஃபின் அலன் குவித்த ரி20 உலகக் கிண்ண சாதனைமிகு அதிவேக சதத்தின் உதவியுடன் நியூஸிலாந்து 9 விக்கெட்களால் நொக் அவுட் செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பரபரப்பை ஏற்படுத்திய மற்றைய அரை இறுதிப் போட்டியில் துடுப்பாட்டத்திலும் களத்தடுப்பிலும் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தி இங்கிலாந்தை 7 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

இந்த இரண்டு அணிகளும் உலகக் கிண்ணத்துக்கு முன்னர் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 தொடரில் இந்தியா 4 – 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.

மேலும் இந்தியாவும் நியூஸிலாந்தும் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட 30 சந்தர்ப்பங்களில்  16 – 11 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. 3 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்தன.

இம்முறை இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம பலம் கொண்ட அணிகளாக தென்படுவதால் இறுதிப் போட்டி இறுக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்றாலும் தனது சொந்த மண்ணில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இந்தியா விளையாடுவதால் அந்த அணி சம்பியனாவதற்கு அனுகூலமான அணி என கருதப்படுகிறது.

‘வெற்றிபெறுவதற்கு நாங்கள் அனுகூலமான அணி அல்ல என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருக்கலாம். ஆனால் வெற்றிக் கிண்ணத்தை ஒரு தடவை சுமப்பதற்கு சிலரின் இதயங்கள் நொறுங்குவது பரவாயில்லை என நான் கருதுகிறேன்’ என இறுதிப் போட்டிக்கு முன்னர் நியூஸிலாந்து அணித் தலைவர் மிச்செல் சென்ட்னர் கூறினார்.

இதேவேளை, ‘அவர்கள் நல்ல திட்டத்தோடு வருகை தந்துள்ளார்கள். நாங்களும் நல்ல திட்டங்களைக் கொண்டுள்ளோம். இந்தப் பெரிய இறுதி ஆட்ட மேடைக்கு நாங்கள் தயாராகிவிட்டோம். மற்றையவர்கள் எம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை விட நாங்கள் திறமையாக என்ன செய்யவேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்’ என இந்திய அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் தெரிவித்தார்.

அணிகள்

இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு செம்சன், இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ் (தலைவர்), திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் டுபே, அக்சார் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரிட் பும்ரா.

நியூஸிலாந்து: டிம் சீஃபேர்ட், ஃபின் அலன், ரச்சின் ரவிந்த்ரா, க்லென் ஃபிலிப்ஸ், மார்க் சப்மன், டெரில் மிச்செல், மிச்செல் சென்ட்னர் (தலைவர்), கோல் மெக்கொன்ச்சி, மெட் ஹென்றிஃ, இஷ் சோதி, லொக்கி ஃபேர்கசன்.

Previous Post

நாடு தழுவிய விசேட பொலிஸ் நடவடிக்கை: 568 பேர் கைது!

Next Post

ஈரானிய மாலுமிகளுக்கு ஒரு மாத கால இலவச விசா: மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கை!

Next Post
ஈரானிய மாலுமிகளுக்கு ஒரு மாத கால இலவச விசா: மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கை!

ஈரானிய மாலுமிகளுக்கு ஒரு மாத கால இலவச விசா: மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

June 18, 2026
நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

June 18, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

கோட்டாபய கைது : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு

June 18, 2026

Recent News

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

June 18, 2026
நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

June 18, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

கோட்டாபய கைது : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு

June 18, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures