அமெரிக்க இராணுவத்தின் முற்றுகைக்குள் இலங்கை சிக்கப்போகிறதா? கொழும்பில் ஏற்படும் திடீர் மாற்றம்
அமெரிக்க படையினர் இலங்கையில் தங்கிருக்கும் வகையில் பாரிய கட்டடத்தொகுதி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க மரைன் (Marine) இராணுவத்தினரின் தங்குமிட வசதி, துணை கட்டடங்கள் மற்றும் தூதரகம் ஊழியர்களுக்கு அவசியமான ஏனைய வசதிகளை கொண்டுள்ளதாக தூதரக அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு அமெரிக்க தூதரக அலுவலகத்தினால் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5.7 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படுகின்ற இந்த புதிய கட்டட தொகுதி அமைக்கப்படவுள்ளது.
இதன் மூலம் தூதரக அலுவலக ஊழியர் சபைக்கு பாதுகாப்பான, நிலையான மற்றும் நவீன அலுவலக தொகுதி ஒன்று கிடைக்கவுள்ளதாக அமெரிக்க தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பு செயல்திறன் கொண்ட கட்டடங்களை இவ்வாறான நாடுகளில் நிர்மாணித்தல் மற்றும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளை ஈட்டுவதற்காக தங்கள் ஊழியர் சபைக்கு உதவுவதே வெளிநாட்டு கட்டடங்கள் செயல்பாடுகள் பிரிவின் முக்கிய நோக்கமாகும்.
இந்த கட்டம் அமெரிக்க கலாசாரம், உயர்மட்ட அமெரிக்க கட்டடக்கலை, பொறியியல், நீண்ட கால தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கிய பிரதிநிதித்துவம் கொண்டு நிர்மாணிக்கப்படுவதாக அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.