ரொறொன்ரோ பகுதியில் நூற்றுக்கணக்கான விபத்துக்கள்
கிரேட்டர் ரொறொன்ரோ பகுதிக்கு நேற்றைய தினம் கடுமையான பனிபொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பனிப்பொழிவு கடும் மழையாக உருமாறியிருந்தது.
இந்த மோசமான வானிலை காரணமாக இன்றைய தினம் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் ஊடான விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதனால் இன்று காலை வேளையில் சுமார் 100 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.