Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சட்டவிரோதமாக முதலைக் குட்டியை வைத்திருந்தவர் கைது!

December 17, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

களுத்துறை,  அளுத்கம, களுவமோதர பகுதியில் சட்டவிரோதமாக முதலைக் குட்டி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் ஹிக்கடுவை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் இன்று புதன்கிழமை  (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

44 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, சந்தேக நபருக்கு எதிராக ரூ. 70,000.00 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதலைக் குட்டியை பொருத்தமான சூழலில் விடுவித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் கால்நடை வைத்தியர்களுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முதலைகள் வனவிலங்கு பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டிய ஊர்வனவாகும். இந்த நிலையில், முதலைக் குட்டிகளை வைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குக் காட்டி பணம் சம்பாதிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சில காலமாகக் அவதானிக்கப்பட்டு வருவதுடன் அவர்களை கைது செய்ய வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!

Next Post

ஹார்ட்டிலே பற்றரி – இணையத் தொடர் விமர்சனம்

Next Post
ஹார்ட்டிலே பற்றரி – இணையத் தொடர் விமர்சனம்

ஹார்ட்டிலே பற்றரி - இணையத் தொடர் விமர்சனம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures