Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கரூரில் அன்று நடந்தது என்ன – வாய்திறந்த ஆதவ் அர்ஜுனா: அச்சத்தில் ஸ்டாலின்

October 15, 2025
in News, World, இந்தியா, முக்கிய செய்திகள்
0
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

கரூர் சம்பவம் நடந்த உடன் நாங்கள் ஓடி விட்டோம் என்று கூறுவது உண்மையல்ல  தவெகவின் (TVK) பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் எழுச்சி

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “வலி மிகுந்த நாட்களை கடந்து வருகிறோம், எங்களுக்கு நெருக்கடியான காலகட்டம் இது.

கரூரில் அன்று நடந்தது என்ன - வாய்திறந்த ஆதவ் அர்ஜுனா: அச்சத்தில் ஸ்டாலின் | Aadhav Arjuna Interview Tvk Case Sc Judgement

எங்கள் உறவுகள், எங்கள் குடும்பம் துக்கத்தில் உள்ளது. தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்த போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் எழுச்சி இருந்தது.

கரூரில் நடைபெற்றது முதல் கூட்டம் கிடையாது. திருச்சி, நாகப்பட்டினம், அரியலூர் என பல மாவட்டங்களுக்கு சென்றுள்ளார்.

எனவே கரூரில் அன்று என்ன நடந்தது என்ற உண்மையை பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

காவல்துறை உதவி செய்வதில்லை

நாங்கள் பிரசாரங்களுக்கு செல்லும் போது காவல்துறை பெரிதாக உதவி செய்வதில்லை.

கரூரில் அன்று நடந்தது என்ன - வாய்திறந்த ஆதவ் அர்ஜுனா: அச்சத்தில் ஸ்டாலின் | Aadhav Arjuna Interview Tvk Case Sc Judgement

அரியலூரில் உதவி செய்தனர், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சில தகவல்களை கொடுத்து உதவினார். அதனால் அந்தக் கூட்டத்தை ரத்து செய்தோம்.

ஆனால் அன்றைய தினம் நாமக்கல்லில் கூட்டத்தை முடித்து விட்டு, கரூரில் உள்ளே நுழையும் போது கரூர் காவல்துறை எங்களை வரவேற்றார்கள், திட்டமிட்ட இடத்தில் கொண்டு போய் நின்று பேசுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் நிறுத்திய இடத்தில் தான் பேசினோம்.

வந்தால் கலவரம் ஏற்படும்

தமிழக அரசின் விசாரணை மீதும் நம்பிக்கை இல்லை, சம்பவம் நடந்த உடன் நாங்கள் ஓடி விட்டோம் என்று கூறுவது உண்மையல்ல.

கரூரில் அன்று நடந்தது என்ன - வாய்திறந்த ஆதவ் அர்ஜுனா: அச்சத்தில் ஸ்டாலின் | Aadhav Arjuna Interview Tvk Case Sc Judgement

கரூர் எல்லையில், நான், நிர்மல் குமார், அருண் ராஜ், ஆனந்த் ஆகியோர் காத்திருந்தோம். எங்கள் கைத்தொலைபேசி நெட்வொர்க் – தரவுகளை சரி பார்த்து அதை தெரிந்துக் கொள்ளலாம்.

காவல்துறையினர் எங்களை வரவேண்டாம், வந்தால் கலவரம் ஏற்படும், பிரச்னை உருவாகும் என்று கூறினார்கள். அதையும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம்.

திட்டமிட்டு, தவெக வரக்கூடாது என்று ஒட்டுமொத்த மாவட்டச் செயலாளர்கள் மீது தீவிரவாதிகள் போல தடியடி நடத்தினார்கள் என்றார்.

Previous Post

அரசாங்க வசமான கதிர்காமம் மெனிக் நதி வீடு: கோட்டாபயவின் பதிவு

Next Post

நான் ஒரு நாள் கைதுசெய்யப்படுவேன் என்று எனக்கு தெரியும் – இஷாரா செவ்வந்தி

Next Post
நான் ஒரு நாள் கைதுசெய்யப்படுவேன் என்று எனக்கு தெரியும் – இஷாரா செவ்வந்தி

நான் ஒரு நாள் கைதுசெய்யப்படுவேன் என்று எனக்கு தெரியும் - இஷாரா செவ்வந்தி

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures