Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கில் முடங்கப்போகும் தனியார் பேருந்து சேவைகள்!

June 28, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கல்விச் சுற்றுலா சென்ற பஸ் விபத்து ; 23 மாணவர்கள் காயம்

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாயன்று வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம்  (Jaffna) மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (27) காலை கால அட்டவணைக்கு முரணான சேவை ஒன்றால் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் இ.போ.ச தரப்பினரிடையே குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது.

இதையடுத்து சில நிமிடங்கள் வாகன நெரிசல் ஏற்பட்டதை அடுத்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை சுமுகமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 தனியார் போக்குவரத்து சேவை

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்க தலைவர், ”இன்று காலை யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்று குறித்த சாலை முகாமையாளரின் உத்தரவுக்கமைய சட்டவிரோத சேவையை வவுனியா நோக்கி முன்னெடுக்க முயன்றது.

வடக்கில் முடங்கப்போகும் தனியார் பேருந்து சேவைகள்! | Private Buses Join The Protest Blocking The North

இதை அவதானித்த நாம் குறுத்த சட்டவிரோத செயற்பாட்டை கண்டித்து அதை நிறுத்துமாறு வலியுறுத்தினோம். ஆனால் இ.போ.சவினர் அடாத்தாக சேவையை முன்னெடுக்க முயன்றனர்.

ஏற்கனவே இச்சட்டவிரோத செயற்பாடு குறித்து துறைசார் தரப்பினருக்கும் போக்குவரத்து அதிகார சபை, துறைசார் அமைச்சு, வடக்கின் ஆளுநர் ஆகியோரிடம் முறையிட்டிருந்ததுடன், காவல் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்துள்ளோம்.

சட்டத்துக்கு முரணாக செயற்படுதல்

ஆனாலும் இதுவரை எந்தவொரு தீர்வுக் கிடைக்காத நிலையே காணப்படுகின்றது.

அத்துடன் இ.போ.ச அடாத்தாக சட்டத்துக்கு முரணாக செயற்படுவதுடன் தனியார் போக்குவரத்து சேவையை முடக்கவும் முயன்று விபத்துக்கள் ஏற்படுவதற்கும், முரண்பாடுகளை உருவாகுவதற்கும் வலிந்து இழுக்கின்றனர்.

வடக்கில் முடங்கப்போகும் தனியார் பேருந்து சேவைகள்! | Private Buses Join The Protest Blocking The North

எனவே இவ்வாறான இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்தும், அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி தனியார் பேருந்துகளின் பாதுகாப்பான சேவையை உறுதி செய்வதற்காகவும் எதிர்வரும் செவ்வாயன்று வடக்கு மகாணம் தழுவிய ரீதியில் முழுமையான சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை தாம் முன்னெடுக்கவுள்ளோம்” என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

யாழ். சுன்னாகம் பகுதியில் இளைஞன் அதிரடியாக கைது

Next Post

தமிழகத்திற்கு தப்பிச் சென்ற மூன்று இலங்கையர்கள் கைது!

Next Post
தமிழகத்திற்கு தப்பிச் சென்ற மூன்று இலங்கையர்கள் கைது!

தமிழகத்திற்கு தப்பிச் சென்ற மூன்று இலங்கையர்கள் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures