Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு, கிழக்கில் புலிகளின் எழுச்சி!! அரசை எச்சரிக்கும் பொன்சேகா

June 28, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
புலிகளின் தாக்குதல் பற்றிய கதை பொய் | புலிகள் இருந்த தீவுகளில் தலைவர்கள் மறைந்துள்ளனர்

வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளின் மனநிலையில் வாழ்ந்த சிலர் இன்னும் இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு மற்றும் இராணு முகாம் அகற்றுவது தொடர்பில், அரச தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புலிகளை எழுச்சி பெற வைக்க முயற்சி 

அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், புலிகளின் நிகழ்ச்சி நிரல்கள் குறித்து கனவு காணும் கூட்டமொன்று இன்னும் இருக்கிறது. அனைத்து மக்களும் அல்ல.

புலிகளின் உறுப்பினர்களாக இருந்த 35 ஆயிரம் பேரில் 7 அல்லது 8 ஆயிரம் பேர் இருக்கலாம்.

வடக்கு, கிழக்கில் புலிகளின் எழுச்சி!! அரசை எச்சரிக்கும் பொன்சேகா | Fonsekas Opinion On Land Release In North And East

புலிகளுக்கு ஆதரவளித்த அரசியல்வாதிகள் இருக்கின்றனர், அத்துடன், புலிகளை மீண்டும் எழுச்சி பெறவைக்க முடிந்த அனைத்தையும் செய்யும் டயஸ்பொரா கூட்டமொன்று உள்ளது.

இவ்வாறான அச்சுறுத்தல்கள் இருக்கும் போது, யுத்தமொன்று உருவான பின்பு இராணுவ முகாம்களை நிறுவுவது தொடர்பில் சிந்திக்காமல், முன்னதாகவே தூர நோக்குடன் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு இராணுவ முகாமகள் நிறுவப்படவேண்டும்.

யாழ்ப்பாண மக்களுக்கு ஆபத்து

யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பை பலவீனப்படுத்தினால் அது யாழ்ப்பாண மக்களுக்குதான் சரியில்லை. அங்குள்ள மக்களே அதனை பற்றி சிந்திக்க வேண்டும்.

மனிதர்களை கொலை செய்த ஆவா என்ற பாதளா கும்பல் அங்கு இருந்தது, இந்தியாவில் இருந்து கேரள கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகிறது.

வடக்கு, கிழக்கில் புலிகளின் எழுச்சி!! அரசை எச்சரிக்கும் பொன்சேகா | Fonsekas Opinion On Land Release In North And East

அத்தோடு, பாதுகாப்பு வீதித்தடைகளை அகற்றினால் தெற்கில் இருந்து கொலைகளை செய்துவிட்டு பாதாள குழுக்கள் வடக்கிற்கு ஊடுருவக் கூடும், அரசியல் இலாபத்திற்காக சில அரசியல்வாதிகள் இராணுவ முகாம்களை அகற்றுமாறு தெரிவித்திருந்தாலும், ஒரு சில இடங்களில் மக்கள பாதுகாப்பு முகாம்கள் இருப்பதற்கு விருப்பப்படுகிறார்கள்.

சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கு இல்லை என்பதை புரிந்துகொண்டு தற்போதுள்ள ஆட்சியாளர்கள் செயற்பட வேண்டும்.” என்றார்.

Previous Post

குட் டே – திரைப்பட விமர்சனம்

Next Post

யாழ். சுன்னாகம் பகுதியில் இளைஞன் அதிரடியாக கைது

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

யாழ். சுன்னாகம் பகுதியில் இளைஞன் அதிரடியாக கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures