Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! சிறிலங்காவிடம் வலியுறுத்திய ஐ.நா ஆணையாளர்

June 26, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் -அரசாங்கம் அனுமதி

இலங்கையில் இறுதிக்கட்டப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க் கொழும்பில் நடத்தப்பட்ட குழு விவாதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் போர்க்குற்றங்களை செய்தவர்களுக்கு கடந்த கால அரசாங்கங்கள் தண்டனையிலிருந்து விலக்கு அளித்த நகர்வு போல புதிய அரசாங்கம் செய்யாமல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும் என்ற இடித்துரைப்பை செய்த ஆணையாளர் குற்றங்களைச் செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவது மிக முக்கியமான நகர்வு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நினைத்துப் பார்க்க முடியாத வலி மற்றும் இழப்பைச் சந்தித்த தமிழ் மக்களுக்கும் அவர்களின் சந்ததியின் எதிர்காலத்துக்கும் பொறுப்புக்கூறல் இன்றியமையாது என்பதால் இந்த விடயத்தில் நீதி நிலைநாட்டப்படுவதை தற்போதைய அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இன்று காலை தமிழர்தாயக பகுதிகளுக்குரிய பயணத்தை ஆரம்பிக்க முன்னர் அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்பெரம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைபேரவையில் இலங்கை குறித்து இன்னொரு தீர்மானகரமான நகர்வு எடுக்கக்கடவுள்ள நிலையில் அந்த நகர்வை நீர்த்துப்போக வைப்பதற்கு உள்ளுர் நல்லிணக்கம் என்ற பழைய தந்திரத்தை புதிய அரசாங்கம் முன்னகர்த்தும் நிலையில் இறுதிக்கட்டப்போரில் போர்க்குற்றங்களை செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என மனித உரிமை ஆணையாளர் குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த விடயம் உட்பட்ட விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு..

Previous Post

அறிவிக்கப்பட்டது 2025 உயர்தரப் பரீட்சை திகதி

Next Post

மட்டக்களப்பில் திருடனை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய 5 பேருக்கு விளக்கமறியல்! 

Next Post
யாழ். வர்த்தகர்கள் 12 பேருக்கு 3 இலட்சம் ரூபா தண்டம்!

மட்டக்களப்பில் திருடனை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய 5 பேருக்கு விளக்கமறியல்! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures