Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மின் கட்டண உயர்வின் எதிரொலி : அதிகரித்த பொருட்களின் விலை

June 23, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய 500 கொள்கலன்களை விடுவிக்க முடியாதுள்ளது

மின்சாரக் கட்டண அதிகரிப்பைத் தொடர்ந்து, அத்தியாவசிய நுகர்வு பொருட்களின் விலைகளும் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

நாடு முழுவதும் அரிசி, தேங்காய், காய்கறிகள், மீன், இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகள் சந்தையில் பெருமளவில் உயர்ந்துள்ளதால், மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். 

அத்துடன் சவர்க்காரம், சலவைத்தூள், பற்பசை மற்றும் ஷம்போ போன்ற பொருட்களின் விலைகளும் கடுமையாக அதிகரித்துள்ளன.

நுகர்வுப் பொருட்களின் விலை

மேலும், வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்கள் நுகர்வுப் பொருட்களை தன்னிச்சையான விலையில் விற்பனை செய்வதால் நுகர்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதால், அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு விலைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று நுகர்வோர் சங்கங்கள் கூறுகின்றன.

மின் கட்டண உயர்வின் எதிரொலி : அதிகரித்த பொருட்களின் விலை | Estimated Price Several Essential Food Items

அத்துடன், அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை நீதியின் முன் நிறுத்த சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் நுகர்வோர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, தனியார் வகுப்புகளின் கட்டணங்கள் பெருமளவில் அதிகரித்ததால் பெற்றோர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். 

பல வகுப்புகளின் கட்டணம் ரூ.3000 – 6000, 7000 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சர் இந்த விடயத்தில் தலையிட்டு சரியான முடிவை எடுக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

காணி விடுவிப்பு கோரி யாழில் வெடித்த போராட்டம்!

Next Post

யாழில் கிணற்றில் இருந்து குடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு!

Next Post
காருடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி

யாழில் கிணற்றில் இருந்து குடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures