கொழும்பில் மாலம்பே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹோகந்தர பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (20) மாலம்பே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலம்பே பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் ஹோகந்தர பகுதியை சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 56 லீற்றர் 250 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாலம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.