Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அணித் தலைவர் சன்டோ, ரஹிம் ஆகியோர் பங்களாதேஷை பலமான நிலையில் இட்டுள்ளனர்

June 17, 2025
in News, Sports, முக்கிய செய்திகள்
0
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை முதல்  ஆரம்பம்

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (17) காலை ஆரம்பமான இலங்கைக்கும் பங்காளாதேஷுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் முதலாம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையின்போது 3 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஒரு கட்டத்தில் 3 விக்கெட்களை இழந்து 45 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த பங்களாதேஷுக்கு அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் சன்டோ, சிரேஷ்ட வீரர் முஷ்பிக்குர் ரஹிம் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் கைகொடுத்துள்ளது.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 137 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர். அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் சன்டோ 70 ஓட்டங்களுடனும் முஷ்பிக்குர் ரஹிம் 66 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க 91 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடரவுள்ளது.

Previous Post

மனைவியை சுட்டுக் கொலை செய்த கணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Next Post

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியுடன் இணைந்த சம்யுக்தா

Next Post
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியுடன் இணைந்த சம்யுக்தா

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியுடன் இணைந்த சம்யுக்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures