சுரங்கப்பாதை தொடர்வண்டியில் பாலியல் பலாத்காரம் செய்த சந்தேக நபர் இவர் தான்
கனடா-சுரங்கபாதை தொடர்வண்டியில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேக நபரை தேடி வரும் ரொறொன்ரோ பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சென்.கிளையர் மேற்கு ரயில் நிலையத்தில் இச்சம்பவம் நவம்பர் மாதம் 27ந்திகதி இரவு 10.47 மணியளவில் நடந்தது.
பெண் ஒருவருக்கு பக்கத்தில் இருந்த சந்தேக நபர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக பொலிசார் கூறியுள்ளனர்.
குறிப்பிட் மனிதன் கறுப்பு நிறம் 30 முதல் 40ற்கு இடைப்பட்ட வயது கறுப்பு கோர்ட், விளிம்புடனான கறுப்பு தொப்பி அணிந்திருந்தார். வெளிர் நிற காற்சட்டை மற்றும் ஒரு ஸ்காவ். சன்கிளாசஸ் அணிந்திருந்ததுடன் மீள பயன்படுத்தும் மளிகை பை வைத்திருந்ததாக விபரிக்கப்பட்டுள்ளது.
தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருடன் 416-808-1300 அல்லது கிரைம் ஸ்ரொப்பசுடன் 416-222-TIPS (8477).தொடர்பு கொள்ளவும்.