Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் மக்களின் நெஞ்சில் தமிழ் தேசியம் இன்றும் அடைகாக்கப்பட்டிருக்கிறது – பொ. ஐங்கரநேசன் 

November 12, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது? | பசுமை இயக்கத் தலைவர்

தமிழ் தேசியத்தை, தமிழை தங்களது பெயரில் கொண்டுள்ள கட்சிகள் மாத்திரமல்ல, அரசு சார்புக் கட்சிகளின் வேட்பாளர்கள் கூட தமிழ் தேசியம் பற்றி முழங்கி வருகிறார்கள். தமிழ் தேசியத்தை இன்று உச்சரிப்பவர்கள் பலரும் தமிழ் தேசியத்தைக் கைவிட்டவர்களாகவும், தமிழ் தேசியத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் பயணிப்பவர்களாகவுமே உள்ளார்கள் என  தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நெஞ்சில் தமிழ் தேசியம் இன்றும் அடைகாக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இதனால்தான் ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு இரண்டேகால் இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியத்தில் தடம் மாறாது பயணிக்க விரும்பும் இம்மக்கள் யாவரும் மாம்பழம் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத் தேர்தலில் சனநாயகத் தமிழ் அரசு கூட்டமைப்பின் சார்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சிறுப்பிட்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ் தேசியம் என்பது உள்ளுடன் அற்ற ஒரு வெற்றுக்கோது அல்ல. ஓர் இனம் பேசுகின்ற மொழி, அது வாழ்கின்ற சூழல், அதன் பண்பாடு ஆகியன பற்றிய ஒருகூட்டுப் பிரக்ஞையே தேசியமாகும். இது அந்த இனத்தின் ஆன்மா போன்றது.

தேசியத்தின் கூறுகளாக உள்ள மொழி, சூழல், பண்பாடு ஆகியவனவற்றுக்கு எதிராக ஆக்கிரமிப்பு நிகழுகின்ற போதெல்லாம் உண்மையான தேசியவாதிகள் அதற்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள். 

சிங்கள – பௌத்த தேசியவாதத்தால் தமிழினம் ஆக்கிரமிக்கப்பட்டபோதுதான் தமிழ் மக்களிடையே தமிழ் தேசிய உணர்வுநிலை மேலெழுந்து தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்டது. 

முள்ளிவாய்க்கால் யுத்தத்துடன் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதவழிப் பயணம்தான் முடிவுக்கு வந்தது. 

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே விடுதலைப் புலிகளினால் தமிழ்  தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது.

ஆனால், முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் முடிவோடு  ஒரு தொடர் அஞ்சலோட்டம் போல தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்தப் பாதையில் இருந்து விலக ஆரம்பித்தது. 

இன்று அது தமிழ் தேசியம் என்ற நிலைப்பாட்டில் இருந்து வெகுதூரம் விலகிவிட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பெரும்பான்மை வகித்த தமிழ் அரசுக் கட்சி முதலில் கூட்டமைப்பைப் புலிநீக்கம் செய்தது. இப்போது தமிழ் தேசியக் கோட்பாட்டையும் முற்றாக நீக்க முனைந்துள்ளது.

தமிழ் தேசியப் பசுமை இயக்கம் தேசியத்தையும், சூழலியத்தையும் விடுதலைப் போராட்டத்தின் இலக்கை நோக்கிய இரண்டு வழிமுறைகளாகக் கருதி உறுதியோடு பயணித்து வருகிறது. 

தமிழ் தேசியத்தில் தடம்மாறாது பயணித்து வரும் நாம் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில்  மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். மக்கள் போலித் தமிழ் தேசியவாதிகளை நிராகரித்து எம்மை ஆதரிக்க  வேண்டும் என்றார். 

Previous Post

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனின் அதிரடி அறிவிப்பு

Next Post

சித்தார்த் நடிக்கும் ‘மிஸ் யூ’ திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

Next Post
மணிரத்னம், கமல்ஹாசன் பாராட்டிய சித்தார்த்தின் ‘சித்தா’

சித்தார்த் நடிக்கும் 'மிஸ் யூ' திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures