Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவு

November 10, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவு

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் (65) மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். டிவிஎஸ் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக வீட்டில் தவறி கீழே விழுந்த நிலையில், உயிர் பிரிந்தது.

நாவல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித்தொடர்கள், ஆன்மிக சொற்பொழிவு போன்ற பல துறைகள் மூலம் புகழ்பெற்றவர். இந்திரா சௌந்தர்ராஜன் சேலத்தை பூர்வீகமாக கொண்டாலும், கடந்த 40 ஆண்டுகளாக மதுரையில் வசித்து வந்தார். அவர் எழுதிய ‘என் பெயர் ரங்கநாயகி, மர்ம தேசம்’உள்ளிட்ட படைப்புகள் தொலைக்காட்சி தொடர்களாக வந்துள்ளன. சிருங்காரம், அனந்தபுரத்து வீடு ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.

சிருங்காரம் படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். ‘ருத்ரம்’ தொலைக்காட்சித் தொடருக்காக தமிழக அரசின் விருது பெற்றார். மேலும் சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருது, மைலாப்பூர் அகாடமி விருது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

Previous Post

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை மரணிக்க வைத்தவர் சுமந்திரனே : ஜனா பகிரங்கம்

Next Post

வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் : உறுதியளித்தார் ஜனாதிபதி அநுர

Next Post
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் : உறுதியளித்தார் ஜனாதிபதி அநுர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures