Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘வாழை’ படத்திற்காக பாடலாசிரியரான மாரி செல்வராஜ்

July 31, 2024
in Cinema, News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
‘வாழை’ படத்திற்காக பாடலாசிரியரான மாரி செல்வராஜ்

புதுமுக குழந்தை நட்சத்திரங்கள் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வாழை’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஒரு ஊருல ராஜா..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தின் உருவாகியிருக்கும் ‘வாழை’ எனும் திரைப்படத்தில் புதுமுக குழந்தை நட்சத்திரம் பொன். வேல் மற்றும் ராகுல் ஆகியோருடன் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ. சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

கிராமப்புற பிள்ளைகளின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்- நவ்வி ஸ்டுடியோஸ் – ஃபார்மர்’ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்சன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ‘வாழை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஒரு ஊர்ல ராஜா..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடலை இயக்குநர் மாரி செல்வராஜ் எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார். இந்த பாடலுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் காணொளி அர்த்த பூர்வமான குறியீடுகள்- கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி- கருப்பு வெள்ளை வண்ண காட்சிகள்- என பார்வையாளர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

Previous Post

பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு

Next Post

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

Next Post
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures