Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘பேச்சி’ மூலம் கதையின் நாயகனான பால சரவணன்

July 26, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
‘பேச்சி’ மூலம் கதையின் நாயகனான பால சரவணன்

தமிழ் திரையுலகின் புதிய ட்ரெண்டின் படி நகைச்சுவை நடிகர்கள் கதையின் நாயகனாக உயர்ந்து வருகிறார்கள். அந்த பட்டியலில் நகைச்சுவை நடிகர் பால சரவணன் ‘பேச்சி’ எனும் படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகி இணைந்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் பி. இராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேச்சி’ எனும் திரைப்படத்தில் பால சரவணன், காயத்ரி சங்கர், ஜனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வெயிலோன் என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் வீரஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கோகுல் பினோய் மற்றும் ஷேக் முஜீப் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்.. தற்போது இந்த திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இரண்டாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன் போது படக் குழுவினர் பங்கு பற்றினர். இந்நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர்களான தேவி மணி மற்றும் ராம்ஜி ஆகியோர் வீரஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இலட்சினையை அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” படத்தின் தயாரிப்பாளரான ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய்  திரைப்பட கல்லூரியில் பயின்ற சக மாணவர் மற்றும் நண்பர். அவர் கொடுத்த ஆதரவினால் தான் இப்படத்தினை இயக்கினேன். இதுவரை ஏராளமான ஹாரர் திரில்லர் படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் இந்தத் திரைப்படம் பட மாளிகைக்கு வருகை தரும் ஹாரர் திரில்லர் படங்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை வழங்கும் என உறுதியளிக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும்  ரசிகர்களிடம் பிரபலமான பால சரவணனை கதையின் நாயகனாக நடிக்க வைத்திருக்கிறேன். அவரும் அதனை உணர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்கினார்” என்றார்.

Previous Post

ஹாட்ரிக் அடிப்பாரா நடிகர் சூரி..?

Next Post

கிளிநொச்சியில் நெல் அறுவடை விழா 

Next Post
கிளிநொச்சியில் நெல் அறுவடை விழா 

கிளிநொச்சியில் நெல் அறுவடை விழா 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures