Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சம்பந்தனின் கனவு நனவாக வேண்டும் | அஞ்சலி உரையில் லக்ஷ்மன் கிரியெல்ல 

July 7, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை முன் கொண்டுசெல்ல முடியாது | லக்ஷ்மன் கிரியெல்ல

சம்பந்தன் எப்போதும் இனங்களின் தனித்துவத்தையும் சமத்துவத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதான எதிர்க்கட்சியின் கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

திருகோணமலையில் இன்று (07) நடைபெற்ற மறைந்த இரா. சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் அஞ்சலி உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய இலங்கைக்குள் பல்லின சமூகத்துக்கும் காணப்படுகின்ற தனித்துவங்களை உறுதி செய்யும் அதேநேரம், இலங்கையர் என்ற அடையாளத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்பதில் சம்பந்தன் இறுதி வரையில் உறுதியாக இருந்தார்.

அதேநேரம் சம்பந்தன் தனிப்பட்ட முறையில் எனக்கு வழிகாட்டியாகவும் அறிவுரை வழங்கும் சிரேஷ்ட அரசியல் தலைவராகவும்  செயற்பட்டிருந்தார். அதனால் அவருடைய இழப்பானது என்னை மிகவும் பாதிப்பதாக இருக்கின்றுது.

அதுமட்டுமின்றி சம்பந்தனின் மறைவானது பொதுமக்களுக்கு மிகப்பெரும் இழப்பாகும். அவருடைய வெற்றிடத்தினை நிரப்புவது எதிர்காலத்தில் மிகவும் கடினமானதாகும்.

அத்துடன், சம்பந்தன் எப்போதும் இனங்களின் தனித்துவத்தையும் சமத்துவத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அத்துடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டும் என்பதிலும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார்.

அதேநேரம் அவர் நீதிக்கான கோரிக்கையை முன்வைத்தபோது பாரிய அழுத்தங்களுக்கும் உள்ளாகிருந்தார். எனினும் அவர் அந்தக் கோரிக்கையை விட்டுக்கொடுப்பின்றி முன்னெடுத்துவந்தார்.

அவருடைய மறைவு இடைவெளியை ஏற்படுத்தியிருந்தாலும் அவரது கனவு நனவாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டு அவரது நான்கு தசாப்த அரசியல் வாழ்க்கையை நினைவுகூர்ந்து நானும் ஐக்கிய மக்கள் சக்தியினரும் அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.

Previous Post

சம்பந்தனின் பூதவுடலுக்கு பா.ஜ.க.,வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அஞ்சலி  

Next Post

இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வு என்பதில் சம்பந்தன் நம்பிக்கை கொண்டிருந்தார் |  நளிந்த 

Next Post
இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வு என்பதில் சம்பந்தன் நம்பிக்கை கொண்டிருந்தார் |  நளிந்த 

இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வு என்பதில் சம்பந்தன் நம்பிக்கை கொண்டிருந்தார் |  நளிந்த 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures