Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாலின சமத்துவ சட்டமூலத்திற்கு ஆதரவளிக்கும் ஆண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண்களாக மாறத் தயாரா? விமல்

June 20, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
விமலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டது

பாலின சமத்துவ சட்டமூலம் பாலின சிகிச்சை மாற்று வியாபாரத்தை  ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் ஆண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண்களாகவும், பெண் உறுப்பினர்கள் ஆண்களாகவும் மாற்றமடைவதற்கு தயார் என்றே கருத முடியும். பாலின சமத்துவம் தொடர்பில் மேற்குலம் எமக்கு பாடம் கற்பிக்க வேண்டிய தேவை கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) இடம்பெற்ற  அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாலின சமத்துவம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தை எதிர்க்க வேண்டிய அவசியம் கிடையாது.அரசியலமைப்புக்கு அமையவே நீதிமன்றம் தொழில்நுட்ப ரீதியில் ஆராய்ந்து தீர்ப்பளித்துள்ளது.

பெண் சமத்துவத்துக்கும்,   மாற்று பாலினத்தவர்களுக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.பெண் சமத்துவம் என்று குறிப்பிட்டுக் கொண்டு  தயாரிக்கப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகளுக்குள் மாற்று பாலினத்தவர்களை உள்ளடக்குவதையே நாங்கள் எதிர்க்கிறோம்.

பாலின மாற்றம் என்பது மேற்குலகத்தில் நவீன கலாச்சாரமாக காணப்படுகிறது. மேற்குலக நாடுகளில் ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் பாலினம் தொடர்பில் பிள்ளைகளிடம் அனுமதி கேட்கப்படுகிறது.

விருப்பமாயின் ஆண் பிள்ளை பெண்ணாகவும்,பெண் பிள்ளை ஆணாகவும் மாற்றயமடையலாம்.பாலுறுப்பு மாற்று சத்திரசிகிச்சைக்காக 4000 டொலர் செலவாகும் என்று குறிப்பிடப்படுகிறது. மேற்குலகம் அவர்களின் கலாச்சாரத்தை அங்கு வைத்துக் கொள்ளட்டும்.

இலங்கை பௌத்த நாடு.பௌத்த கோட்பாடுகளில் திருநங்கைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.மூன்றாம் பாலினத்தவர்களின் நலன் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

அதற்காக பெண் சமத்துவம் என்பதற்கும் இவர்களை உள்ளடக்க கூடாது,அவ்வாறான நிலை ஏற்பட்டால் பிரச்சினைகள் தோற்றம் பெறும் என்பதையே உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாலின சமத்துவம் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் ஆண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண்களாகவும்,பெண் உறுப்பினர்கள் ஆண்களாகவும் மாற தயாராக உள்ளார்கள் என்பதையே கருத முடியும் இந்த சட்டமூலம் பிறப்பால் ஆண்களையும்,பெண்களையும் இல்லாத பிரச்சினைக்கு கொண்டு செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆகவே தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Previous Post

நடிகர் பரத் வெளியிட்ட காளி வெங்கட்டின் ‘தோனிமா’ பட டீசர்

Next Post

பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

Next Post
நாடாளுமன்றம் இன்று கூடவுள்ளது

பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures