Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தியா-பாகிஸ்தான் ரி20 உலகக் கிண்ண போட்டி: ISIS ஆதரவுக் குழு அச்சுறுத்தல்

May 29, 2024
in News, Sports, முக்கிய செய்திகள்
0
இந்தியா-பாகிஸ்தான் ரி20 உலகக் கிண்ண போட்டி: ISIS ஆதரவுக் குழு அச்சுறுத்தல்

இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டியின்போது பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது.

நியூயோர்க்கில் இரத்தக்களறி ஏற்படலாம் என சுவரொட்டி ஒன்று வெளியானதை அடுத்து பயங்கரவாதத் தாக்குதல் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

ISISக்கு ஆதரவான குழுவினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட ஒரு வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு முகமூடி அணிந்த மனிதன் தோளில் துப்பாக்கியுடன் இருப்பதைக் காட்டுகிறது. 

‘நீங்கள் போட்டிக்காக காத்திருங்கள்…’ என குறிப்பிடப்பட்டுள்ள அந்த வரைபடத்தில் தொடர்ந்து ‘நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம்…’ என இரத்தச் சிவப்பில் எழுதப்பட்டுள்ளது.

அந்த சுவரொட்டியில், நசவ் விளையாட்டரங்கில் ஜூன் 9ஆம் திகதி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் தான் கிரிக்கெட் பரம வைரிகள் இந்தியாவும் பாகிஸ்தானும் அந்த மைதானத்தில் ஏ குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

அந்த சுவரொட்டியில், மைதானத்தின் மீது பறக்கும் ட்ரோன்கள், டைனமைட் குச்சியுடன் நேரத்தை கணிப்பிடும் கடிகாரம் என்பனவும் காணப்படுகிறது.

ஆனால், தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் தொடர்பாக ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் முன்னெச்சரிக்கை மட்டத்தை அதிகரிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

‘போட்டியின்போது ஒவ்வொருவரினதும் உயிர்பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுப்பது எமது தலையாக கடமையாக இருக்கும். அத்துடன் எங்களிடம் மிகவும் விரிவான மற்றும் வலுவான பாதுகாப்பு திட்டம் இருக்கிறது’ என சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

‘போட்டிகளை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடுகளில் உள்ள அதிகாரிகளுடன் நாங்கள் மிக நெருக்கமாக பணியாற்றிவருகிறோம். போட்டிகளின்போது அடையாளம் காணப்பட்ட ஏதேனும் ஆபத்துகளைத் தணிக்க பொருத்தமான திட்டங்கள் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து மதிப்பீடு செய்துவருகிறோம்’ என அவர் கூறினார்.

தாக்குதல்களை இஸ்லாமிய அரசு ஊக்குவித்ததாக முன்னர் செய்திகள் வெளியானபோதிலும், போட்டியின்போது பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படும் என அஞ்சத் தேவையில்லை என சர்வதேச கிரிக்கெட் பேரவை முன்னர் தெரிவித்திருந்தது.

இஸ்லாமிய அரசிடம் இருந்து அச்சுறுத்தல் வெளிப்பட்டது என்பதை ஐ.சி.சி.யும் கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸும் (மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை) உறுதிப்படுத்தவில்லை. ஆனால், அதன் பிரசார சேவையான நஷிர்-இ பாகிஸ்தான், விளையாட்டு நிகழ்வுகள் மீதான தாக்குதல்களை ஊக்குவிப்பதாக கூறப்படுகிறது.

ஒன்பதாவது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை (இலங்கை நேரப்படி ஜூன் 2 – 30) ஐக்கிய அமரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் மொத்தம் ஒன்பது இடங்களில் நடைபெறவுள்ளது.

Previous Post

கசினோவுக்கு அடிமையாகியவர் இரு கூட்டுறவு கிராமிய வங்கிகளை உடைத்துக் கொள்ளை !

Next Post

26 நாட்களில் 96,890 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

Next Post
இலங்கை வரும் இங்கிலாந்து சுற்றுலா பயணிகளுக்கு விசேட அறிவித்தல்

26 நாட்களில் 96,890 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

June 28, 2026
வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

June 28, 2026
காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

June 28, 2026
மட்டக்களப்பில் உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் உலகளாவிய திருக்குறள் மாநாடு

June 28, 2026

Recent News

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

June 28, 2026
வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

June 28, 2026
காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

June 28, 2026
மட்டக்களப்பில் உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் உலகளாவிய திருக்குறள் மாநாடு

June 28, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures